Monday, November 9, 2009

ஒரு முறை பார்த்தாலே போதும்

திரைப்படம்: பாஞ்சாலி
இயற்றியவர்:
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: ஏ.எல். ராகவன்
ஆண்டு: 1959

ஒரு முறை பார்த்தாலே போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும்

கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும்
கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும்
கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும்
கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும்
கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும்
கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும்
கலையழகே உன்னை வாழ்நாளில்

ஒரு முறை பார்த்தாலே போதும்

கன்னங்களை ரோஜா மலர் என்பதா?
கன்னங்களை ரோஜா மலர் என்பதா? இல்லை
கண்ணாடி என்றே நான் வர்ணிப்பதா?
கண்களை மீனென்று சொல்வதா? ஆஆ
கண்களை மீனென்று சொல்வதா? இல்லை
கடலுக்கு உவமையாய்க் கொள்வதா?

ஒரு முறை பார்த்தாலே போதும்

மாந்தளிரைக் காணும் போது மாந்தளிரைக் காணும் போது
மாந்தளிரைக் காணும் போது மாந்தளிரைக் காணும் போது - உன்
வண்ண மேனி அதில் காணுதே வண்ண மேனி அதில் காணுதே
பூங்குயிலே உன்னை எண்ணும் போதே
பூங்குயிலே உன்னை எண்ணும் போதே ஒரு
புதிய உலகமும் தோணுதே..

ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும்



Friday, November 6, 2009

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

Song: maalai pozhuthin
பாடல்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே

Movie: Nhagyalakshmi
திரைப்படம்: பாக்யலக்ஷ்மி

Singers: P. Suseela
பாடியவர்: பி. சுசீலா

Lyrics: Poet Kannadasan
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

Music: M.S. Viswanathan, T.K. Ramamurthy
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

Year: - ஆண்டு: 1952

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி?
காண்பது ஏன் தோழி? ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி
மங்கையி்ன் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி - அவர்
மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி?
இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம் ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

maalaip pozhudhin mayakkaththilE naan kanavu kaNtEn thOzhi
maalaip pozhudhin mayakkaththilE naan kanavu kaNtEn thOzhi
manadhil irundhum vaarththaikaL illai kaaraNam En thOzhi?
kaaraNam En thOzhi? aaaa aaaaaa
maalaip pozhudhin mayakkaththilE naan kanavu kaNtEn thOzhi

inpam sila naaL thunpam sila naaL endravar yaar thOzhi?
inpam kanavil thunpam edhiril kaaNpadhu En thOzhi?
kaaNpadhu En thOzhi? aaaa aaaaaa

maalaip pozhudhin mayakkaththilE naan kanavu kaNtEn thOzhi

maNamutiththavar pOl arukinilE Or vativu kaNtEn thOzhi
mangaiyi-n kaiyil kungumam thandhaar maalaiyittaar thOzhi
vazhi maRandhEnO vandhavar nenjil saaindhu vittEn thOzhi - avar
maRavEn maRavEn endraar utanE maRandhu vittaar thOzhi
maRandhu vittaar thOzhi aaaa aaaaaa

maalaip pozhudhin mayakkaththilE naan kanavu kaNtEn thOzhi

kanavil vandhavar yaarenak kEttEn kaNavar endraar thOzhi
kaNavar endraal avar kanavu mutindhadhum pirindhadhu En thOzhi?
iLamaiyellaam veRum kanavu mayam idhil maRaindhadhu sila kaalam
theLivumaRiyaadhu mutivum theriyaadhu mayangudhu edhirkaalam
mayangudhu edhirkaalam aaaa aaaaaa

maalaip pozhudhin mayakkaththilE naan kanavu kaNtEn thOzhi
manadhil irundhum vaarththaikaL illai kaaraNam En thOzhi?
kaaraNam En thOzhi? aaaa aaaaaa
maalaip pozhudhin mayakkaththilE naan kanavu kaNtEn thOzhi



Thursday, November 5, 2009

Song Lyrics of Vadikkai Maranthathum

M: Vaadikkai Marandhadhum Aeno
Enai Vaattida Aasai Dhaano
Pala Kodi Malar Azhagai Moodi Vaiththu
Manadhaik Kollai Adippadhum Aeno
Vaadikkai Marandhadhum Aeno

F: Vaadikkai Maranthiduvaeno
Enai Vaattidum Kaelvigal Aeno
Ilamangai Endhan Manadhil Pongi
Varum Ninaivil Maatram Solvadhum Aeno
Vaadikkai Maranthiduvaeno
Aaaaaaaaaaaaaaaaa

M: Andhi Naeraththin Aanandha Kaatrum
Anbu Manakkum Thaen Suvai Paattum
Amudha Virundhum Marandhu Ponaal
Ulagam Vaazhvadhu Aedhu
Pala Uyirgal Magizhvadhum Aedhu
Nenjil Iniththidum Uravai
Inbamennum Unarvai Thaniththu Pera Mudiyaadhu

F: Oooooooooo..Andhi Naeram Ponadhaal
Aasai Marandhae Pogumaa
Andhi Naeram Ponadhaal
Aasai Marandhae Pogumaa
Anbuk Karangkal Saerum Podhu
Vambu Vaarththaigal Aeno
Inba Vaegam Dhaano

F: Vaadikkai Marandhiduvaeno
Enai Vaattidum Kaelvigal Aeno
Pudhu Mangai Endhan Manadhil
Pongi Varum Ninaivil Maatram Solvadhum Aeno
Vaadikkai Marandhiduvaeno
Aaaaaaaaaaaaaaaa

M: Kaanthamo Idhu Kannoli Thaano
Kaadhal Nadhiyil Neendhidum Meeno
Karuththai Arindhum Naanam Aeno
Karuththai Arinthum Naanam Aeno

F: Porumai Izhandhidalaamo
Perum Puratchiyil Irangidalaamo
Naan Karung Kal Silaiyo
Kaadhalenakkilaiyo
Varambu Meerudhal Muraiyo

Iruvarum: Saikkilum Oda Mann Maelae
Iru Chakkaram Suzhalvadhu Polae
Anai Thaandi Varum Sugamum
Thoondi Vidum Mugamum Saerndhadhae Uravaalae
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa..



EN INIYA PON KANAAVE - LYRICS

en iniya pon nilaavae pon nilavilen kanaavae
ninaivilae pudhu sugam dha dha dha dhaa dha dha
thodarudhae dhinam dhinam dha dha dha dhaa dha dha

(en iniya)

panneeraith thoovum mazhai jillenra kaatrin alai
saerndhaadum innaeramae
en nenjil ennennavoa ennangal aadum nilai
ennaasai unnoaramae
venneela vaanil adhil ennenna maegam
oorgoalam poagum adhil undaagum raagam
puriyaadhoa en ennamae
anbae...

(en iniya)

ponmaalai naerangalae en inba raagangalae
poovaana koalangalae
then kaatrin bimbangalae thaenaadum roajaakkalae
ennenna jaalangalae
kannoadu thoanrum siru kanneeril aadum
kai saerum kaalam adhai en nenjam thaedum
idhudhaanae en aasaigal
anbae...

(en iniya)




ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே

படம்: முதலாளி
இயற்றியவர்ள: கவிஞர் கா.மு. ஷெரிஃப்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்ததரராஜன்

ஏரிக் கரையின் மேலே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே
ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே

தென்னை மரச் சோலையிலே சிட்டுப் போல போற பெண்ணே
ஏஏஏ..ஏ.. ஏஏஏஏ.. ஏஏ.. ஏஏஏஏஏஏஏ... ஏஏஏ....
தென்னை மரச் சோலையிலே சிட்டுப் போல போற பெண்ணே
சிட்டுப் போல போற பெண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசிப் போவோம் கண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசிப் போவோம் கண்ணே

அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே

மாமரத் தோப்பினிலே மச்சான் வரும் வேளையிலே
மச்சான் வரும் வேளையிலே
மாமரத் தோப்பினிலே மச்சான் வரும் வேளையிலே
கோவம் கொண்ட மானைப் போலே ஓடலாமோ பெண்மயிலே
கோவம் கொண்ட மானைப் போலே ஓடலாமோ பெண்மயிலே

அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே



Wednesday, November 4, 2009

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ

படம்: அபூர்வ சகோதரர்கள்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: இசை ஞானி இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
ஆண்டு: 1989

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ

காட்டோரம் மேயும் குரும்பாடு அதப் போட்டாதான் நமக்கு சாப்பாடு அட
காட்டோரம் மேயும் குரும்பாடு அதப் போட்டாதான் நமக்கு சாப்பாடு ஹோய்
சீறினா சீறுவேன் கீறினாக் கீறுவேன்

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ அட
அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ

அட தார தம்பட்டம் தட்டட்டும் கொட்டட்டும் நானாட ஹோ
வேசம் திக்கெட்டும் சொக்கட்டும் நிக்கட்டும் பூவாரம் போடத்தான்
பாரு முன்னாலும் பின்னாலும் என்னாளும் வாலாட ஹோய்
யாரும் வம்புக்கும் தும்புக்கும் எங்கிட்ட வாராம ஓடத்தான் அட
போக்கிரி ஆடுறான் மோதினாத் தூளு தான் நான் பாஞ்சாட
மூக்கு தான் மொகர தான் எகிரித்தான் போகுமே நான் பந்தாட
கில்லாடி ஊரிலே யாரடா கூறடா மல்லாடிப் பாப்போமா வாங்கடா
ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே எந்தத்
தோட்டாவும் என்னைத் தொளைக்காதே

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ போடு
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ

அட பாசம் வச்சாலே வாலாட்டி நிப்பேனே நாய் போல ஹோ
மோசம் செஞ்சாலே சொல்லாமக் கொல்வேனே பேய் போல மாறித்தான்
உள்ளம் இப்போதும் எப்போதும் கொண்டேனே பூவாக ஹோய்
நியாயம் இல்லாத பொல்லரைச் சாய்ப்பேனே புலியாக மாறித்தான்
அட ஒட்டுனா ஒட்டுவேன் வெட்டுனா வெட்டுவேன் என் வீராப்பு
ஒத்தையா நின்னு தான் வித்தையைக் காடுவேன் என் கித்தாப்பு
வில்லாதி வில்லானும் அஞ்சணும் கெஞ்சணும் வந்திங்கு வந்தனம் சொல்லணும்
ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே எந்தத் தோட்டாவும் என்னைத் தொளைக்காதே

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ

காட்டோரம் மேயும் குரும்பாடு அதப் போட்டாதான் நமக்கு சாப்பாடு
காட்டோரம் மேயும் குரும்பாடு அதப் போட்டாதான் நமக்கு சாப்பாடு
சீறினா சீறுவேன் கீறினாக் கீறுவேன்

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
அண்ணாத்தே (ஹொய்) ஆடுறார் (ஹொய்) ஒத்திக்கோ (ஹொய்) ஒத்திக்கோ (ஹொய்)
தென்னாட்டு (ஹொய் ஹொய்) வேங்கை தான் (ஹொய் ஹொய்) ஒத்துக்கோ ஒத்துக்கோ



Tuesday, November 3, 2009

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1965

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு
வாடுவதே என் பாடு இதில்
நான் அந்த மான் நெஞ்சில் நாடுவதெங்கே கூறு

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம்
காதலை யார் மனம் தேடும் இதில்
நான் அந்த மான் நெஞ்சில் நாடுவதெங்கே கூறு

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ



Tuesday, October 27, 2009

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

திரைப்படம்: அவன் தான் மனிதன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1975

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்
காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று



Monday, October 12, 2009

Nee Kaatru Naan Maram

Movie Name: Nilaave Vaa
Singer: Hariharan
Music Director: Vidya Sagar
Lyrics: Vairamuthu
Year: 1998
Producer: Shoba Chandrasekharan
Director: Venkatesan A
Actors: Suvalakshmi, Vijay


nee kaatru, naan maram, yenna sonnaalum thalayaattuven
nee mazhai, naan bhoomi enge vizhunthaalum enthikkolven
nee iravu, naan vinmeen, nee irukkum vare thaan naan iruppen

nee alai naan karai enne adithaalum ettrukolven
nee udal naan nizhal nee vizhavendaam naan vizhuven
nee kilai naan ilai unnai ottum varaikkum thaan uyirthiruppen
nee vizhi naan imai unnai serum varaikkum naan thudithiruppen
nee swaasam naan dheham naan unnai mattum uyirthoda anumathippen

nee vaanam naan neelam unnil naanai kalanthiruppen
nee ennam naan vaarthai nee sollum pozhuthe velippaduven
nee veyil naan kuyil un varugai paarthu thaan naan isaippen
nee udai naan idai unnai urangum pozhuthum naan uduthiruppen
nee pagal naan oli endrum unnai mattum saarndhe naan iruppen



Friday, October 9, 2009

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்

திரைப்படம்: இரும்புத் திரை
இயற்றியவர்: பாபநாசம் சிவன், பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: எஸ்.வி. வெங்கடராமன்
பாடியோர்: பி. லீலா, டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1960

ஓஓஓஓ ஓஓ ஆஆஆஆ ஆஆஆஆஆ

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?
நிலைமை என்னவென்று தெரியுமா?
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா?

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா?
கவனம் என்னவென்று தெரியுமா?
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?

என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து
ஆஆஆஆ ஆஆஆஆஆஆ
என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து
இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன?

ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஆஆஆஆ ஆஆஆஆஆ
ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஒன்றும் தெரியாதது போல் கேட்பதும் ஏனொ?

மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?
கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?
இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ?
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ?

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா?

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா?
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?



Thursday, October 8, 2009

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்

படம்: அவசரக் கல்யாணம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: டி.ஆர். பாப்பா
பாடியவர்: பி. சுசீலா

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
கண்ணா ஆஆ கண்ணா ஆஆஆ

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்

பொன்னி சிரிக்கும் தஞ்சை நாட்டில் காணப்
போக வேண்டும் சூரக்கோட்டை
பொன்னி சிரிக்கும் தஞ்சை நாட்டில் காணப்
போக வேண்டும் சூரக்கோட்டை - அந்த
சூரக் கோட்டை சின்ன ராஜா - உங்க
தோள்களிலே இந்த வண்ண ராணி கண்ணா

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்

கட்டிலில் பாடலாம் கைகளில் ஆடலாம்
கட்டிலில் பாடலாம் கைகளில் ஆடலாம்
தொட்டு விளையாடினால் தொட்டில் வரை போகலாம்
தொட்டு விளையாடினால் தொட்டில் வரை போகலாம்
தொடங்கட்டும் கோகுல லீலைகளெல்லாம் - பின்பு
தொடரட்டும் கண்ணனின் சேவைகளெல்லாம்

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்



மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்

படம்: இரு மலர்கள்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய் - இங்கே

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் - இளம்
வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் - இளம்
வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
கூனல் பிறை நெற்றியில் குழலாட - கொஞ்சும்
குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
கூனல் பிறை நெற்றியில் குழலாட - கொஞ்சும்
குளிர் முகத்தில் நிலவின் நிழலாட - கலை
மானின் இனம் கொடுத்த விழியாட

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ

மானின் இனம் கொடுத்த விழியாட - அந்த
விழி வழி ஆசைகள் வழிந்தோட - நல்ல

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய் - இங்கே
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் - நல்ல
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய் - இங்கே
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

கரிதநிதபமகரி ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
கரிதநிதநிபதநிஸ்ரிநீ தபதமபமகரி
ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
ஸ்ரிரிகமநீ நிஸ்ஸ்ரிகதா தநிநிஸ்ரி பாதமாபமகரிஸ
ரிகமநி ஸ்ரிக மபதமா பதநி ஸ்ரிக நிரிஸ்தநி நித
மாபதநிஸ்கரி மாதவிப் பொன் மயிலாள்

தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி
தா ஜிம் கிடதகதரிகிடதோம் தா ஜிம் கிடதகதரிகிடதோம்
தா ஜிம் கிடதகதரிகிடதோம் தாததிம்த தத்திம் தத்திம்
பதநிஸ்நித தணதஜம் தபஜுணுத ஜம் ஜம்
பதநி பதப ஜம் தஜம் தமதணகு ஜம் ஜம்

பமபதீம் தகிட நிதம ஜம் ஸ்ரித ஸ்நித சுகம் தகிட கரிநிதஜம்
பதநிஸ் தஜம் ஸ்ரிகம தகிடதஜம் கரிநீ ததரித ஜம்
ரிகமபா பதா தஜம் தணம் ஸ்கரி நிரிஸ் தணதா ப ஜணும்
ஸ்ரிகமாபதநீஸ்ரி கரிநீத தரிகிணதோம்
ஸ்ரிகாமபதாநிஸ் ரிஸ்நீத தரிகிணதோம்
ரிககாரி நிஸ்தாநி கரிநீத தரிகிணதோம் தரிகிணதோம் தரிகிணதோம்

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்



Wednesday, October 7, 2009

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

படம்: தெய்வப் பிறவி
இயற்றியவர்: தஞ்சை என். ராமையா தாஸ்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சி.எஸ். ஜெயராமன்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
தானே நம்பாதது சந்தேகம்

மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல
மாண்புடைய மக்களை மடையராக்கும் - மனித
மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல
மாண்புடைய மக்களை மடையராக்கும்
வீணான யோசனைக்கே இடமாக்கும்
வீணான யோசனைக்கே இடமாக்கும் - பல
விபரீத செயல்களை விளைவாக்கும்

தன்னைத் தானே தன்னைத் தானே
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே ஏ..ஏ
ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே
உள்ளத்தை ஒடவிடும் - பின்னும்
சேரும் இடம் வந்து சேராத ஓடமாய்
திசை மாறச் செய்து விடும்
ஊரார் சொல் பொய்யதனை ஊட்டிவிடும் - உண்மை
உரைப்பார் சொல் தப்பெனவே வில்க்கிவிடும் -காதில்
ஊரார் சொல் பொய்யதனை ஊட்டிவிடும் - உண்மை
உரைப்பார் சொல் தப்பெனவே வில்க்கிவிடும் - மனம்
மாறாத காதலர்க்குள் பகைமை மூட்டி விடும்
மாறாத காதலர்க்குள் பகைமை மூட்டி விடும்
மனிதனை விலங்காக்கிடும்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம்
நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் - சுத்த
ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம்
நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் - அது
ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும்
ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும் - அதற்கு
ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்
ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்

தானே தன்னைத் தானே
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்



Monday, September 14, 2009

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்

படம்: பஞ்சவர்ணக் கிளி
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1965

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்

பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ணச் சிட்டு வந்து மலர் கொடுக்க
கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க
கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க முத்தம் கொடுக்க

CONTINUE READING HERE...



Thursday, August 27, 2009

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே

படம்: பாவை விளக்கு
இயற்றியவர்: மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவார்: சி.எஸ். ஜெயராமன்
ஆண்டு: 1960

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே
ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே குற்றால
அழகை நாம் காண்பதற்கு வண்னக் கிளியே
ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே குற்றால
அழகை நாம் காண்பதற்கு வண்னக் கிளியே
தென்றலிசை பாடி வரும் தேனருவி ஆடிவரும் ம்...
தென்றலிசை பாடி வரும் தேனருவி ஆடிவரும்
அன்றலர்ந்த ஷெண்பகப் பூ வண்ணக் கிளியே
அன்றலர்ந்த ஷெண்பகப் பூ வண்ணக் கிளியே எங்கும்
ஆனந்தக் காட்சி தரும் வண்ணக் கிளீயே
ஆனந்தக் காட்சி தரும் வண்ணக் கிளீயே

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே குற்றால
அழகை நாம் காண்பதற்கு வண்ணக் கிளியே

எங்கும் பனி தூங்கும் மலை...
எங்கும் பனி தூங்கும் மலை வண்ணக் கிளியே நெஞ்சில்

TO CONTINUE READING...CLICK HERE



பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனி கூட்டம் அதிசியம் ...

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனி கூட்டம் அதிசியம் ....!
வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியக்ங்கள் அதிசியம் ....!
துளை செல்லும் காற்று மெல்லிசையாதால் அதிசியம் ....!
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசியம் ....!
அதிசியமே.. அசந்து போகும் நீ எந்தன் அதிசியம் ....!
கல்தோன்றி, மண்தோன்றி, கடல் தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசியம் ....!
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசியம் ....!

ஒரு வாசம் இல்லா கிளையின் மீது வாசம் உள்ள பூவை பார்....
பூ வாசம் அதிசியமே....!
அலை கடல் தந்த மேகத்தில் சிறு துளி கூட
உப்பில்லை...

TO CONTINUE READING...CLICK HERE



Tuesday, August 25, 2009

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?

திரைப்படம்: தெய்வம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
பாடியவர்: மதுரை சோமசுந்தரம்
ஆண்டு: 1972


கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை
அஆஆ.. ஆஆஆ.. மருத மலை மருத மலை முருகா

மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
ஆ...ஆ ஆ ஆ....ஆ...ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆ
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்

பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா

அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா
ஆஆ...ஆஆ...ஆஆ.
தேவர் வணங்கும் மருதமலை முருகா

மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் கொண்டாடும் வேலய்யா ஐயா

MORE TAMIL SONGS LYRICS...CLICK HERE



பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்

அசோக் குமார்
பாபநாசம் சிவன்
ஜி. ராமநாதன்
எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1941

பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள்போல்
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள்போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காலமும் செல்ல மடிந்திடவோ
காலமும் செல்ல மடிந்திடவோ

உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோம்
உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோம்
சத்திய ஞான தயாநிதியாகிய
சத்திய ஞான தயாநிதியாகிய
புத்தரைப் போற்றுதல் நம் கடனே
புத்தரைப் போற்றுதல் நம் கடனே

உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லையெனில் நர ஜென்மமிதே
உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லையெனில் நர ஜென்மமிதே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ் மரமே வெறும் பாமரமே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ் மரமே வெறும் பாமரமே


Saturday, August 22, 2009

கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா

திரைப்படம்: மௌனம் சம்மதம்
இயற்றியவர்: புலமைப் பித்தன்
இசை: இளையராஜா
பாடியோர்: கே. ஜே. ஜேசுதாஸ், சித்ரா
ஆண்டு: 1990

கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா?
ஆகாயம் மண்ணிலா?..
கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா

தென்பாண்டிக் கூடலா தேவாரப் பாடலா?
தீராத ஊடலா தேன் சிந்தும் கூடலா?
என் அன்புக் காதலா எந்நாளும் கூடலா?
பேரின்பம் நெய்யிலா நீ தீண்டும் கையிலா?
பாற்போமே ஆவலா? வா வா நிலா

கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா என்னோடு வா நிலா

உன் தேகம் தேக்கிலா தேன் உன்தன் வாக்கிலா?
உன் பார்வை தூண்டிலா நான் கைதிக் கூண்டிலா?
சங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா?
என் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா?
தேனூறும் வேர்ப்பலா உன் சொல்லிலா?..

கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா?
ஆகாயம் மண்ணிலா?..
கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா



ஆடை கட்டி வந்த நிலவோ?

படம்: அமுதவல்லி
இயற்றியவர்: தங்கை டி.என். ராமையா தாஸ்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.ஆர். மஹாலிங்கம், பி. சுசீலா
ஆண்டு: 1959

ஆடை கட்டி வந்த நிலவோ?
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ?
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ?
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ? குளிர்
ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில்
கூடு கட்டி வாழும் குயிலோ?

துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்கை
துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்கை
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
கிளை தான் இருந்து கனியே சுமந்து
தனியே கிடந்த கொடி தானே
கண்ணாளனுடன் கலந்தனந்தமே பெற
காவினில் வாழும் கிளி நானே

துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்க்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்க்கை

ஆ...ஆ..ஆ..
அந்தி வெய்யில் பெற்ற மகளோ குலுங்கும்
அல்லி மலர் இனத்தவளோ?
அந்தி வெய்யில் பெற்ற மகளோ குலுங்கும்
அல்லி மலர் இனத்தவளோ?
உந்தி உந்தி விழும் நீரலையில்
ஓடி விளையாடி மலர் சிந்தி வரும் தென்றல் தானோ?
இன்பம் தந்த மயில் இந்த மானோ?
ஆஹா அஹஹஹஹஹஹா ஓஹொஹோஹொஹோ..ம்ம்..லாலா..

அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை
அஞ்சி அஞ்சி ஓடுவதில் இன்பமில்லை
வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை

இதயம் கனிந்து எதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட
நன்னேரமிதே மனம் மீறிடுதே
நன்னேரமிதே மனம் மீறிடுதே
வன மாளிகை ஓரம் ஆடிடுவோம்
ஆ.. ஆ.ஆஆ..ஆஆ...

ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ? குளிர்
ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ?
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ? முகில்
ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ?



Thursday, August 20, 2009

நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்

படம்: பேசும் தெய்வம்
இயற்றியவர்: வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1967

நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
நான் அனுப்புவது கடிதம் அல்ல

நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
மலருக்குத் தேன் எழுதும் கடிதம்
மங்கைக்கு நான் எழுதும் கடிதம்

எழுதி அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
நான் அனுப்புவது கடிதம் அல்ல

எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
உன் மனமோ நான் துயிலும் மஞ்சம்

நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்..


Wednesday, August 19, 2009

டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

படம்: அன்பு எங்கே
இயற்றிவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: வேதா
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1958

ஏய்..யா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே ஹா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

அதிகமாகப் படிச்சுப் படிச்சு மூளை கலங்கிப் போச்சு
அணுகுண்டைத் தான் போட்டுகிட்டு அழிஞ்சு போகலாச்சு
அறிவில்லாம அடக்கிப்புட்டா மிருகமின்னு சொன்னோம் - அந்த
மிருகமெல்லாம் நம்மைப் பாத்து சிரிக்குதென்ன செய்வோம்

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

ஐயா வரவப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா - அந்த
ஐயா இங்கே கும்மாளந்தான் போடுறாரு சும்மா
அப்பன் பாட்டன் ஆஸ்தியெல்லாம் சிகரெட்டாக மாறி
ஐயா வாயில் புகையுது பார் ஐயம் வெரி சாரி

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே ஆஹாஹாஹா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே ஆஹாஹாஹா
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்
காஞ்சு போன ரொட்டித் துண்டும் சூப்பும் இவரு டின்னர்
குறுக்கு வழியில் பணத்தை சேர்க்க இந்த மனுஷன் ஆச
குதிரை வாலில் கொண்டு போயி கட்டிடுவார் காச

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே (ஆஹாஹாஹா)
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே (ஆஹாஹாஹா)
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

கண்ணும் கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடி போட்டு கையைக் காலை ஆட்டுது
கண்ணும் கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடி போட்டுக் கையைக் காலை ஆட்டுது
கண்டவங்க மண்டையெல்லாம் தாளத்தோட ஆடுது
காலு கையி உடம்பையெல்லாம் தூக்கித் தூக்கிப் போடுது

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

ஹாய்..யா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே


Monday, August 17, 2009

வெய்யிற்கேற்ற நிழலுண்டு Tamil Song Lyric

திரைப் படம்: கள்வனின் காதலி
இயற்றியவர்: எஸ்.டி. சுந்தரம்
பாடியோர்: கண்டசாலா, பி. பானுமதி,
ஆண்டு: 1955

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு

கையில் கம்பன் கவியுண்டு கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறை அமுதுண்டு கலசம் நிறை அமுதுண்டு அமுதுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு

தெய்வ கீதம் பலவுண்டு தெய்வ கீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு தெரிந்து பாட நீயுண்டு பாட நீயுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு

வையந்தரும் இவ்வனமன்றி வையந்தரும் இவ்வனமன்றி
வாழும் ஸ்வர்க்கம் வேறுண்டோ வாழும் ஸ்வர்க்கம் வேறுண்டோ
ஸ்வர்க்கம் வேறுண்டோ

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு



கண்ணிலே அன்பிருந்தால் Tamil Song Lyric

படம்: ஆனந்தி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1965

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால் நீரிலும் தேனூறும்
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்

நெல்லிலே மணியிருக்கும் நெய்யிலே மணமிருக்கும்
பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்லாத நினைவிருக்கும்
சொல்லாத நினைவிருக்கும்

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்

பிள்ளையோ உன் மனது இல்லையோ ஒர் நினைவு?
முன்னாலே முகமிருந்தும் கண்ணாடி கேட்பதென்ன?
கண்ணாடி கேட்பதென்ன?

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்

சொந்தமோ புரியவில்லை சொல்லவோ மொழியுமில்லை
எல்லாமும் நீயறிந்தால் இந்நேரம் கேள்வியில்லை
இந்நேரம் கேள்வியில்லை

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்...



Friday, August 14, 2009

கண்ணன் எங்கள் கண்ணனாம் Tamil Song Lyric

கண்ணன் எங்கள் கண்ணனாம்
கார்மேக வண்ணனாம்
வெண்ணெய் உண்டக் கண்ணனாம்
மண்ணெய் உண்டக் கண்ணனாம்

குழலினாலே மாடுகள்
கூடச் செய்தக் கண்ணனாம்
கூட்டமாகக் கோபியர்
கூட ஆடும் கண்ணனாம்

ம்லைக்கு நல்ல குடையென
மலைப்பிடித்க் கண்ணனாம்
பூதனயின் பால் உறிந்து
மோக்ஷம் கொடுத்தக் கண்ணனாம்

உரலிலே கட்டுப் பெற்று
தவிழ்ந்து வந்தக் கண்ணனாம்
உறியில் வெண்ணைக் குறிவைத்து
திருட்டு மாயக் கண்ணனாம்

அன்னை யசோதைக்கு வாய்க் காட்டி
அசர வைத்தக் கண்ணனாம்
விஸ்வரூப்ம் கண்ட அன்னையை
மயக்க வைத்தக் கண்ணனாம்


கோபிஸ்த்ரீயுடன் ராஸலீலை
ஆடி வந்தக் கண்ணனாம்
பகளாசுரனின் மூக்கை பிளந்து
சாகடித்தக் கண்ணனாம்

தேனுகாசுரனைச் சுழற்றி
வீசிஎறிந்தக் கண்ணனாம்
கமசன் அம்மான் மேலேறி
வதம் செய்தக் கண்ணனாம்


ஏழை க் குசேலனின் அவலை
ருசித்து உண்டக் கண்ணனாம்,
அபயம் என்ற திரௌபதிக்கு
சேலைத் த்ந்தக் கண்ணனாம்


கீதாநாயகன் எங்கள் கண்ணனாம்
அஷ்டமியில் அவதாரம் செய்த கண்ணனாம்
விஷ்ணுவின் அவதாரம், அந்தக் கண்ணனாம்
ரக்ஷிப்பவன் எங்களை அந்தக் கண்ணனாம்


இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் Tamil Song Lyric

படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர்: சங்கர் மஹாதேவன்
ஆண்டு 1999

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்?

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா?
காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா?
அன்பே என்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத் தானே ஒரு ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா?
காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா?
அன்பே என்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத் தானே ஒரு ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?

இதயமொரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி
இது தான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
க்ண்ணாடி பிம்பம் கண்ட கை ஒன்றுமில்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆனதடி நீ
ஒன்று சொல்லடி பெண்ணே இல்லை நின்று கொள்ளடி கண்ணே
என்தன் வாழ்க்கையே உந்தன் விழி விளிம்பில்
என்னைத் துரத்தாதே உயிர் கரையேறாதே

இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இனி இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா?
காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா?

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது?
பூவாசம் வீசும் உன்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்டபின்னும் இருளாத பாகம் எது
கதிர் வந்து காயும் உன்தன் கண்களடி பல
உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன
என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா?

என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?
நியாயமா நியாயமா?
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?
மௌனமா மௌனமா? என்ன சொல்லப் போகிறாய்?



Wednesday, August 12, 2009

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா

படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர்: சங்கர் மஹாதேவன்
ஆண்டு 1999

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்?

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா?
காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா?
அன்பே என்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத் தானே ஒரு ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா?
காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா?
அன்பே என்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத் தானே ஒரு ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?

இதயமொரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி
இது தான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
க்ண்ணாடி பிம்பம் கண்ட கை ஒன்றுமில்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆனதடி நீ
ஒன்று சொல்லடி பெண்ணே இல்லை நின்று கொள்ளடி கண்ணே
என்தன் வாழ்க்கையே உந்தன் விழி விளிம்பில்
என்னைத் துரத்தாதே உயிர் கரையேறாதே

இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இனி இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா?
காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா?

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது?
பூவாசம் வீசும் உன்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்டபின்னும் இருளாத பாகம் எது
கதிர் வந்து காயும் உன்தன் கண்களடி பல
உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன
என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா?

என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?
நியாயமா நியாயமா?
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?
மௌனமா மௌனமா? என்ன சொல்லப் போகிறாய்?


மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் Tamil Song Lyric

அழகு நிலா
கவிஞர் கண்ணதாசன்
சீர்காழி கோவிந்தராஜன்
1960

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ
மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ

இனிய குரலில் குயில் போலே
இசையும் அழகாய்ப் பாடுகின்றான்
எருதுகள் போலே வண்டிகளை
இழுத்துக் கொண்டு ஓடுகின்றான்
வனத்தில் வாழும் பறவைகள் போல்
வானில் பறந்து திரிகின்றான்
வனத்தில் வாழும் பறவைகள் போல்
வானில் பறந்து திரிகின்றான்
மனிதனாக வாழ மட்டும்
மனிதனுக்குத் தெரியவில்லை

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ

கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தை
சொல்லில் கொடுக்கத் தெரிந்து கொண்டான்
குள்ளநரி போல் தந்திரத்தால்
குடியைக் கெடுக்கப் புரிந்து கொண்டான்
வெள்ளிப் பணத்தால் மற்றவரை
விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்
வெள்ளிப் பணத்தால் மற்றவரை
விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்
மனிதனாக வாழ மட்டும்
மனிதனுக்குத் தெரியவில்லை ஹோ

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ



Tuesday, August 11, 2009

ஊருக்கெல்லாம் ஓரே சாமி Tamil Song Lyric

படம்: ஆளுக்கொரு வீடு
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: எல்.ஆர். ஈஸ்வரி
ஆண்டு: 1960

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ

ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி
ஓரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா

ஊத்துக்கெல்லாம் ஓரே காத்து ஓரே காத்து ஓரே தண்ணி
ஓரே வானம் ஓரே பூமி ஆமடி பொன்னாத்தா

ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி
ஓரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓ ஓஓஓஓஓஓ

தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம்
தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம்

எல்லோருக்கும் ஒலகம் ஒண்ணு இருளும் ஒண்ணு ஒளியும் ஒண்ணு
இன்னும் சொன்னா நீயும் ஒண்ணு நானும் ஒண்ணே தான்
எல்லோருக்கும் ஒலகம் ஒண்ணு இருளும் ஒண்ணு ஒளியும் ஒண்ணு
இன்னும் சொன்னா நீயும் ஒண்ணு நானும் ஒண்ணே தான்
யாரு என்னைக் கீறினாலும் ரத்தம் ஒண்ணுதானே
யாரு என்னைக் கீறினாலும் ரத்தம் ஒண்ணுதானே
ஆக மொத்தம் பிறந்ததெல்லாம் பத்தாம் மாதம் தானே
ஆக மொத்தம் பிறந்ததெல்லாம் பத்தாம் மாதம் தானே
உயிருக்கெல்லாம் ஒரே பாதை ஓரே பாதை ஓரே வாசல்
ஓரே கூடு ஓரே ஆவி பாரடி கண்ணாத்தா
உயிருக்கெல்லாம் ஒரே பாதை ஓரே பாதை ஓரே வாசல்
ஓரே கூடு ஓரே ஆவி பாரடி கண்ணாத்தா

ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி
ஓரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா

தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம்
தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம்

தானந்தா தானா தைதன்னேனா தானந்தா தானா தானே தந்தேனா
தானே தன்தேனா தானே தன்தேனா தானே தன்தேனா தானே தன்தேனா

தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம்
தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம்

பாடு பட்டோம் கொஞ்சமுமில்லே பலன் வெளஞ்சசா பஞ்சமுமில்லே
ஆடும் மாடும் நாமும் வாழ அருள்புரிவாளே அம்மா அருள் புரிவாளே
அங்காளம்மன் கோயிலுக்குப் பொங்க வைக்க வேணும்
அங்காளம்மன் கோயிலுக்குப் பொங்க வைக்க வேணும்
அன்னை அவள் எங்களையும் பொங்க வைக்க வேணும்
அன்னை அவள் எங்களையும் பொங்க வைக்க வேணும்
ஆளுக்கெல்லாம் ஓரே கோயில் ஓரே கோயில் ஓரே பூஜை
ஓரே நியாயம் ஓரே தீர்ப்பு கேளடி கண்ணாத்தா
ஆளுக்கெல்லாம் ஓரே கோயில் ஓரே கோயில் ஓரே பூஜை
ஓரே நியாயம் ஓரே தீர்ப்பு கேளடி கண்ணாத்தா

ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி
ஓரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா
ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி
ஓரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா



Friday, August 7, 2009

பசுமை நிறைந்த நினைவுகளே Tamil Song Lyric

படம்: ரத்தத் திலகம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்

குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே நாமே
வாழ்ந்து வந்தோமே

பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்

எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ - என்றும்
மயங்கி நிற்போமோ

பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம் நாம்
பறந்து செல்கின்றோம்


Thursday, August 6, 2009

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா? Tamil Song Lyric

படம்: இருவர் உள்ளம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1963

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?

உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா?
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா?
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா?
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா?
விளக்கைக் குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா?
விளக்கைக் குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா?
வீட்டுக் குயிலைக் கூட்டில் வைத்தால் பாட்டுப்பாடுமா பாட்டுப்பாடுமா?

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?

மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே சில
மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே சில
மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே அடிமை செய்தானே

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?

உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது?
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது?
பழுதுபட்ட கொவிலியே தெய்வமேது?
பனி படர்ந்த பாதையிலே பயணமேது?

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?



Wednesday, August 5, 2009

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

திரைப்படம்: குமாரராஜா
ஆண்டு: 1957
இசை: டி.ஆர். பாப்பா
பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
பாடியவர்: பி.லீலா

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே
ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே - நீ
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

நாட்டின் நெறி தவறி நடந்து விடாதே - நம்
நாட்டின் நெறி தவறி நடந்து விடாதே
நல்லவர்கள் தூற்றும் படி வளர்ந்து விடாதே - நீ

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது - நீ
மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது - பண்பு
முறைகளிலும் மொழிதனிலும் மாறக்கூடாது
மாற்றார் கைப் பொருளை நம்பி வாழக் கூடாது - தன்
மானமில்லாக் கோழையோடு சேரக் கூடாது - நீ

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும்
சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்
வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் - நீ
வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும்
அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும்
அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும் - நீ

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

வெற்றி மேல் வெற்றி வர விருது வர பெருமை வர
மேதைகள் சொன்னது போல் விளங்கிட வேணும்
வெற்றி மேல் வெற்றி வர விருது வர பெருமை வர
மேதைகள் சொன்னது போல் விளங்கிட வேணும்
பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் ஆ
பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வளர்ந்திட வேணும் - நீ

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே
ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே - நீ
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

#
#

Tuesday, August 4, 2009

மண்ணுக்கு மரம் பாரமா Tamil Song Lyric

படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
இயற்றியவர்: சுரதா
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி
ஆண்டு: 1958

மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?

வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே

கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?

அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?

அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?

மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
Follow me on Twitter

Friday, July 31, 2009

யாரை நம்பி நான் பொறந்தேன்

திரைப்படம்: எங்க ஊர் ராஜா
இயற்றியவர்: கவிஞர் கண்னதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே பெத்த புள்ளே சொந்தமில்ல

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனமே கல்லம்மா
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையைப் பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக நீ யார் நான் யார் போடா போ
ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
தேடி வரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடி வரும்

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

Follow me on Twitter

Thursday, July 30, 2009

இந்த மான் உன்தன் சொந்த மான்

திரைப்படம்: கரகாட்டக் காரன்
இயற்றியவர்: கங்கை அமரன்
இசை: இளையராஜா
பாடியோர்: இளையராஜா, சித்ரா

இந்த மான் உன்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
இந்த மான் உன்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே
இந்த மான் உன்தன் சொந்த மான் பக்கம்
வந்த மான்

வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே
நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
அன்னமே ஆ..ஆ..ஆ.
அன்னமே என்தன் சொர்ணமே உன்தன்
எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மதுக் கிண்ணமே அதில்
பொன்மணி வைரங்கள் மின்னுமே
எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே

இந்த மான் உன்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவனே என்னுயிரே

பொன்மணி மேகலை ஆடுதே
உன்விழி தான் இடம் தேடுதே
பெண் உடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே
எண்ணத்தான் ஆ.. ஆ..
எண்ணத்தான் உன்னை எண்ணித்தான்
உடன் மின்னத்தான் மேகலை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான் என்னை
சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
மோகந்தான் சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்

இந்த மான் உன்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
இந்த மான் என்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னவனே
Follow me on Twitter

Wednesday, July 29, 2009

காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே

நெஞ்சம் மறப்பதில்லை
கவிஞர் கண்ணதாசன்
எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
டி.எம் சௌந்தரராஜன்

காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
கள்ளழகர் கோயில் கொண்ட வீட்டுப் பொண்ணே
காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே

பாடுகிற பாட்டக் கொஞ்சம் கேளடி பொண்ணே
பாடுகிற பாட்டக் கொஞ்சம் கேளடி பொண்ணே
பக்குவமா பதிலே இங்கே கூறடி பொண்ணே பொண்ணே

காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே

மாடப்புறாப் போலே ஒரு கன்னி வந்தாளாம்
மாப்பிள்ளைய மனசுக்குள்ளே எண்ணி வந்தாளாம்
ஆடி மாச வெள்ளம் போலே ஆடி வந்தாளம் - வந்து
ஆசையெல்லாம் கண்ணுக்குள்ளே மூடி வச்சாளாம்

காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
கள்ளழகர் கோயில் கொண்ட வீட்டுப் பொண்ணே
காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே

எட்டாத தூரம் என்று ஏங்கி விட்டாளா?
ஏழையென்று வீட்டுக்குள்ளே தங்கி விட்டாளா?
தொட்டது போல் ராத்திரி வேளே கனவு கண்டாளா?
தூக்கத்திலே யாரிடமும் உளறி விட்டாளா?

ஏன் பாத்தோம் ஏன் நெனச்சோமுன்னு கவலைப் படுறாங்களா?
எப்போ பாப்போம் கப்புனு சேருவோமுன்னு நெனக்கிறீங்கிளா?
அப்போதைக்கப்போ ஆசையிலேயும் பாசத்திலேயும்
நேசத்திலேயும் விழுந்து துடிக்கிறாங்களா?

அம்மா மனசு சும்மா இருன்னு ஜமாஜமான்னு
கல்யாணம் நடக்கும்னு சொல்றியா?

கல்யாண மாப்பிள்ள பொண்ணு போகுது பாரு
காதல் தந்த கவலை எல்லாம் தீருது பாரு
பொ்ல்லாத மாமன் மனசு மாறுது பாரு
பூப்போல பெண்ணுக்கு வாழ்வு வருது பாரு

காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
கள்ளழகர் கோயில் கொண்ட வீட்டுப் பொண்ணே
காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே

Follow me on Twitter

Tuesday, July 28, 2009

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

அவள் ஒரு தொடர்கதை
கவிஞர் கண்ணதாசன்
எம்.எஸ். விஸ்வநாதன்
கே.ஜே. ஜேசுதாஸ்

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா? ஆ..
நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா? - இல்லை
என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?
தெய்வம் செய்த பாபம் இது போடி தங்கச்சீ
கொன்றால் பாபம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி

ஆதி வீடு அந்தம் காடு இதில்
நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

வெறும் கோவில் இதிலென்ன அபிஷேவம் உன்
மனமெங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி

கொண்டதென்ன கொடுப்பதென்ன - இதில்
தாயென்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதையென்ன?

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் - அது
தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி

உண்மை என்ன பொய்மை என்ன இதில்
தேனென்ன கடிக்கும் தேளென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

Follow me on Twitter

Monday, July 27, 2009

காணா இன்பம் கனிந்ததேனோ

படம்: சபாஷ் மீனா
இயற்றியவர்: கு.ம. பாலசுப்பிரமணியம்
இசை: டி.ஜி. லிங்கப்பா
பாடியவர்: மோதி, பி.சுசீலா

காணா இன்பம் கனிந்ததேனோ
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ
ஆஆஅ ஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ

வானம் சிந்தும் மாமழை எல்லாம்
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
வானம் சிந்தும் மாமழை எல்லாம்
வானோர் தூவும் தேன்மலரோ?
வானோர் தூவும் தேன்மலரோ?
மேகம் யாவும் பேரொலியோடு
ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
மேகம் யாவும் பேரொலியோடு
மேளம் போலே முழங்குவதாலே

காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ

கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
விண்ணில் வாண வேடிக்கையோ?
மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
மனதில் பொங்கும் ப்ரேமையினாலே

காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஆஆஆஆஆஆ
காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஆ..ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஅ, ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅஅ ஆஆஆஆஆஆஆஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ
Follow me on Twitter

Tuesday, July 21, 2009

அத்திக்காய் காய் காய்

பலே பாண்டியா
விஸ்வநாதன் ராமமூர்த்தி
கவிஞர் கண்ணதாசன்
டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், ஜமுனா ராணி
இயக்கியவர்: பி.ஆர். பந்துலு
ஆண்டு 1962

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ? என்னுயிரும் நீயல்லவோ?
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே..

ஓஓஓ..ஓஓஓ..
கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?

இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா..

ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா..

உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

ஆஹாஹா ஆஹா ஓஹோஹோ ஹோஹோ ம்ஹ்ம்ம் ம்ம்

Follow me on Twitter

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்

மலைக் கள்ளன்
டி.எம். சௌந்தரராஜன்

ஆ..ஆ...ஆ..ஆ..ஆ..
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - இன்னும்
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டிப்
பாமர மக்களை வலையினில் மாட்டி

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் - கல்வி
தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம் - கல்வி
தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கருத்தாகப் பல தொழில் பயிலுவோம்
கருத்தாகப் பல தொழில் பயிலுவோம் - ஊரில்
கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்
- ஊரில்
கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

ஆளுக்கொரு வீடு கட்டுவோம்
ஆளுக்கொரு வீடு கட்டுவோம் - அதில்
ஆன கலைகளை சீராகப் பயில்வோம் - அதில்
ஆன கலைகளை சீராகப் பயில்வோம்
கேளிக்கையாகவே நாளினைப் போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாகத் திரட்டுவோம்

இன்னும் எத்தனை காலந்தான் இன்னும்
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
இந்த நாட்டிலே இந்த நாட்டிலே இந்த நாட்டிலே


Follow me on Twitter

Monday, July 20, 2009

எங்களுக்கும் காலம் வரும்

படம்: பாசமலர்
இயக்கம்: ஏ. பீம்சிங்
பாடலாசிரியர்: க்விஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1961

தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனேனா
தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனேனா ஓ....ஓ..ஓ..ஓ..
தந்தான தானதந்தானே தானேதந்தானேனே தானே தானேதந்தானேனே தானே தானேதந்தானே தந்தா

எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனன்னா

தந்தத் தானே தந்தன்னா தந்தத் தானே தந்தன்னா ஆ..ஆ..ஆ..ஆ ஆ..ஆ..ஆ

வளரும் வளரும் என்றே காத்திருந்தோம்
மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம்
மலர் முடிந்து பிஞ்சு வரும் வளர்ந்தவுடன் காய் கிடைக்கும்
காய்களெல்லாம் கனிந்தவுடன் பழம் பறிப்போமே

எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

தந்தத் தானே தந்தன்னா தந்தத் தானே தந்தன்னா ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ

உழவும் தொழிலும் இங்கே நாம் படைத்தோம்
உறவும் சுவையும் என்றும் நாம் வளர்த்தோம்
பணம் படைத்த மனிதரைப் போல் பஞ்சு மெத்தை நாம் பெறுவோம்
மாடி மனை வீடு கட்டி வாழ்ந்திருப்போமே

எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை ஆ...ஆ..ஆ..ஆ..
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ..ஆ..ஆ..ஆ..
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ.ஆ.ஆ.அ
தோல்வியுமில்லை ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே


Follow me on Twitter

அத்திக்காய் காய் காய்

> பலே பாண்டியா
> விஸ்வநாதன் ராமமூர்த்தி
> கவிஞர் கண்ணதாசன்
> டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், ஜமுனா ராணி
> இயக்கியவர்: பி.ஆர். பந்துலு
> ஆண்டு 1962
>
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
> இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
> இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ? என்னுயிரும் நீயல்லவோ?
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே..
>
> ஓஓஓ..ஓஓஓ..
> கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
> அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
> கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
> அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
> மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?
> என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
> இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?
>
> இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
> நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
> இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
> நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
> உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?
> என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
>
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
> இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
>
> ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா..
>
> ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
> ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
> ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
> ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
> சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா
> என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
>
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
> இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
>
> ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா..
>
> உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
> வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
> உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
> வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
> கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே
> இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா
>
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
> இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
>
> ஆஹாஹா ஆஹா ஓஹோஹோ ஹோஹோ ம்ஹ்ம்ம் ம்ம்
>
Follow me on Twitter

Saturday, July 18, 2009

சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே

வீரபாண்டிய கட்டபொம்மன்
இயற்றியவர்: கு.மா. பாலசுப்பிரமணியம்
பாடியவ்ர்: எஸ். வரலக்ஷ்மி
இசை: ஜி. ராமநாதன்

சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
மங்காத பொன்னே
மங்காத பொன்னே உன் வாய் முத்தம் ஒன்றாலே
மாறத இன்பங்கள் சேர்ப்பாயடி

சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

வாடாத ரோஜா உன் மேனி
வாடாத ரோஜா உன் மேனி - துள்ளி
ஆடாதே வா சின்ன ராணி
பூவான பாதம் நோவாத போதும்
புண்ணாகி என் நெஞ்சம் வாடும்
பாராளும் மாமன்னர் மார் மீதிலே நீ
சீராட வாராய் செந்தேனே - இந்தப்
பாராளும் மாமன்னர் மார் மீதிலே நீ
சீராட வாராய் செந்தேனே

சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

செவ்வல்லிக் கை வண்ணம் காட்டி ஆ..ஆ..
செவ்வல்லிக் கை வண்ணம் காட்டி எங்கள்
சிந்தை எல்லாம் இன்பமூட்டி நீ
ஆடாதே கண்ணே யாரேனும் உன்னை
கண்டாலும் ஆகாது மானே
அன்பென்னும் ஆனந்தப் பூங்காவிலே நீ
பண் பாட வாராய் செந்தேனே

சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி


Follow me on Twitter

Thursday, July 16, 2009

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் எனும் எலும்போடு சதை
நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியில் வல்வினை சூழ்ந்ததா
இன்மையை நான் அறியாததா
இன்மையை நான் அறியாததா
சிறு தொன்மையில் உண்மையை உணர்ந்திட

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்
ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பல வினையா
கணம் கணம் தினம் என்னை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும்
துரத்துதே உன் அருள் அருள் அருள் என்று
அதை நின்று மனம் இங்கு பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால் தாங்குவாய் உன்
திருக்கரம் எனை அரவணைத்துனதருள் பெற

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் எனும் எலும்போடு சதை
நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே

Wednesday, July 15, 2009

பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு

கிழக்கு வாசல் 1990
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னு மணி சிரிச்சா வெள்ளி மணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்

பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு

காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
மஞ்சளோ தேகம் கொஞ்சவரும் மேகம்
அஞ்சுகம் தூங்க கொண்டு வரும் ராகம்
நிலவே வான் நிலவே நான் புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹோய்

பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னு மணி சிரிச்சா வெள்ளி மணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு

பூநாத்து மொகம் பாத்து வெண்ணிலா நாண
தாளாம தடம் பாத்து வந்த வழி போக
பூநாத்து மொகம் பாத்து வெண்ணிலா நாண
தாளாம தடம் பாத்து வந்த வழி போக
சித்திரத்துச் சோலே முத்து மணி மாலே
மொத்தத்தில தாரேன் துக்கமென்ன மானே
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
விண்ணுலே மீன் புடிச்சு சேல தெச்சுத் தாரேன்

பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னு மணி சிரிச்சா வெள்ளி மணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு


Saturday, July 11, 2009

பிறக்கும் போதும் அழுகின்றாய்

படம்: கவலை இல்லாத மனிதன்
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்

இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்
இயற்கை சிரிக்கும்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்

அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்
பெரும்பேரின்பம்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே

Thursday, July 9, 2009

வா கலாப மயிலே

படம்: காத்தவராயன்
நடிகர்கள்: சிவாஜி கணேசன், என்.எஸ். கிருஷ்ணன், சாவித்திரி, கண்ணாம்பா, ஈ.வி. சரோஜா
பாடலாசிரியர்: டி.என். ராமையாதாஸ்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
தயாரிப்பு: டி.ஆர். ராமண்ணா

வா கலாப மயிலே வா கலாப மயிலே ஓடி நீ
வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே

வந்தேன் கனியமுதம் தந்தேன் மகிழ்ந்திடவே வா
வந்தேன் கனியமுதம் தந்தேன் மகிழ்ந்திடவே
வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே

வாழ்நாளில் இனி நான்
வாழ்நாளில் இனி நான் வளம் பெறவே
வாழ்நாளில் இனி நான் வளம் பெறவே
வண்ணத் தமிழ்க் கலையே துள்ளித் துள்ளி விளையாட வா
வண்ணத் தமிழ்க் கலையே துள்ளித் துள்ளி விளையாட வா
நீ வா கண்ணே வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே

ஆலையின் கரும்பானேன் ஆழியின் துரும்பானேன்
ஆலையின் கரும்பானேன் ஆழியின் துரும்பானேன்
காலமெல்லாம் உன்தன் காதலில் மெலிந்தேனே
காலமெல்லாம் உன்தன் காதலில் மெலிந்தேன்
விண்ணோடு விளையாடும் வளர்மதியே
விண்ணோடு விளையாடும் வளர்மதியே என்தன்
கண்ணோடு கனிந்தாடும் கலை நிதியே
கண்ணோடு கனிந்தாடும் கலை நிதியே
எந்நாளும் மறவேனே எழில் ரதியே
எந்நாளும் மறவேனே எழில் ரதியே

மின்னலிடைக் கொடியே அன்னநடை அழகோடு வா
மின்னலிடைக் கொடியே அன்னநடை அழகோடு வா
வாராயோ என்னைப் பாரயோ கலி தீராயோ
கண்ணே வாராயோ என்தன்
ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா

மங்கையர் முகத்திலே கொஞ்சி விளையாடும்

படம்: கல்யாணப் பரிசு
ஜிக்கி குழுவினர்
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்

ம்ங்கையர் முகத்திலே கொஞ்சி விளையாடும்
மஞ்சள் நிற வளையல் இது வாழ்வு தரும் வளையல்
மங்கலப் பெண்குலம் பொட்டு வைத்தே மகிழும்
குங்கும நிறத்தோடு குலுங்கும் திரு வளையல்
வற்றாத மாநில வளந்தனை விளக்கிடும்
வற்றாத மாநில வளந்தனை விளக்கிடும்
மங்காத பச்சை நிறம் வழங்கும் எழில் வளையல் - தும்பை
மலர் போன்று இரு மனமும் மாசின்றி வாழ்கவென
வாயார வாழ்த்திடும் வெண்சங்கு வளையல்
வாயார வாழ்த்திடும் வெண்சங்கு வளையல்

அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
அக்கம் பக்கம் கலகலப்பு யாரைப் பார்த்தாலும் சுறுசுறுப்பு
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே

முத்துப் போலே பவழக் கொத்துப் போல இன்னும்
மூணு மாசம் போனா மகன் பொறப்பான்
முத்துப் போலே பவழக் கொத்துப் போல இன்னும்
மூணு மாசம் போனா மகன் பொறப்பான்
பட்டுப்போலத் தங்கத் தட்டுப் போலே கரும்புக்
கட்டுப் போலக் கிடந்து கண்னைப் பறிறப்பான்

அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே

ஒண்ணும் தெரியாத சின்னப் பிள்ளை போலே
ஒக்காந்திருக்காரு மாப்பிள்ளை அத்தான் ஆமா
ஒக்காந்திருக்காரு மாப்பிள்ளை அத்தான் - அவர்
கண்ணே முழிக்கிறாரு சும்மா கனைக்கிறாரு
என்னான்னு கேளுங்கடி சங்கதியத் தான் - அடி
என்னான்னு கேளுங்கடி சங்கதியத் தான் - அடி
எனக்குந்தெரியாது ஒனக்குந்தெரியாது
ஏதேதோ பேசுறாங்க ரெண்டு பேரும் - அதை
வெளக்க முடியாது வெவரம் புரியாது
வேணாண்டி நமக்கது ரொம்ப தூரம் - அடி
ஆமாண்டி நமக்கது ரொம்ப தூரம்

அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே

தாலாட்டுப் பாடி இவர் தாயாகி மகனுக்குப்
பாலூட்ட நெருங்குது நாளு
தாலாட்டுப் பாடி இவர் தாயாகி மகனுக்குப்
பாலூட்ட நெருங்குது நாளு - அவன்
காலாட்டிக் கையாட்டித் துள்ளுறதைப் பாத்துப்புட்டா
கீழே விட மாட்டாரு ஆளு - அவனைக்
கீழே விட மாட்டாரு ஆளு

அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
அக்கம் பக்கம் கலகலப்பு யாரைப் பார்த்தாலும் சுறுசுறுப்பு
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே

Tuesday, July 7, 2009

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு

உன்னால் முடியும் தம்பி
இயக்கியவர்: கே. பாலச்சந்தர்
நடிகர்கள்: ஜெமினி கணேசன், கமலஹாசன், சீதா, ஜனகராஜ், மீசை முருகேஷ், நாசர், வி.கே. ராமசாமி
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: முத்துலிங்கம் புலமைப்பித்தன்

தந்தன்னானா தந்தன்னானா தந்தன்னானா தானா
தந்தன்னானா தந்தன்னானா தந்தன்னானா தந்தன்னானா

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே
வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லே - சனம்
நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லே - இது
நாடா இல்லே வெறும் காடா? - இதெக்
கேக்க யாரும் இல்லே தோழா - இது
நாடா இல்லே வெறும் காடா? இதெக்
கேக்க யாரும் இல்லே தோழா

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது?
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ
வீடின்றி வாசலின்றித் தவிக்குது
எத்தனை காலம் இப்படிப் போகும்?
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்
என்றிங்கு வாழும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே

ஆத்துக்குப் பாதை இங்கு யாரு தந்தது?
தானாகப் பாதை கண்டு நடக்குது
காத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது?
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா?
கங்கையும் தெற்கே பாயாதா? காவிரியோடு சேராதா?
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா?

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே - இது
நாடா இல்லே வெறும் காடா? - இதெக்
கேக்க யாரும் இல்லே தோழா - இது
நாடா இல்லே வெறும் காடா? - இதெக்
கேக்க யாரும் இல்லே தோழா




==============================

Monday, July 6, 2009

மயக்கம் எனது தாயகம்

திரைப்படம்: குங்குமம்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்



Get this widget | Track details | eSnips Social DNA


மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம் (மயக்கம்)

பகலில் தோன்றும் நிலவு
கண் பார்வைக்கு மறைந்த அழகு
திரை மூடிய சிலை நான்
துன்பச் சிறையில் மலைந்த மலர் நான் (மயக்கம்)

நானே எனக்குப் பகையானேன் - என்
நாடகத்தில் தான் திரை ஆனேன்
தேனே உனக்குப் புரியாது
அந்த தெய்வம் வராமல் விளங்காது

விதியும் மதியும் வேறம்மா - அதன்
விளக்கம் நான் தான் பாரம்மா
மதியில் வந்தவள் நீயம்மா - என்
வழி மறைத்தாள் விதியம்மா (மயக்கம்)

ஆடி அடங்கும் வாழ்க்கையடா

திரைப்படம்: நீர்க்குமிழி

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா!
ஆறடி நிலமே சொந்தமடா!

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா - கண்
மூடினால் காலில்லாக் கட்டிலடா!

பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே வாழ்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்

சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்!

வகுப்பான் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை

Saturday, July 4, 2009

ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர். ஈஸ்வரி

இயற்றியவர்: மருதகாசி

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

திரைப்படம்: பாகப்பிரிவினை

மந்தரையின் போதனையால் மனம் மாறிக் கைகேயி
மஞ்சள் குங்குமம் இழந்தாள்
வஞ்சக சகுனியின் சேர்க்கையால் கௌரவர்கள்
பஞ்ச பாண்டவரைப் பகைத்து அழிந்தார்
சிந்தனையில் இதையெல்லாம்
சிறிதேனும் கொள்ளாமல் மனிதரெல்லாம்
மந்த மதியால் அறிவு மயங்கி
மனம் போனபடி நடக்கலாமோ?

ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே

உணர்வோடு ஒன்றியே உருவாகும் பாசமே
அணையாத தீபமாய் சுடரென்றும் வீசுமே
நெஞ்சில் உண்டான அன்பையே துண்டாடி வம்பையே
உறவாகத் தந்திடும் சிலர் சொல்லை நம்பியே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே

ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே

துணையின்றி வெண்புறா தனியாக வந்ததே
வனவேடன் வீசிய வலைதன்னில் வீழ்ந்ததே
இனம் யாவும் சேர்ந்து தான் அதை மீட்டுச் சென்றதே
கதையான போதிலும் கருத்துள்ள பாடமே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே

ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே

Thursday, July 2, 2009

வடிவேலும் மயிலும் துணை

திரைப்படம்: அம்பிகாபதி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இசை: ஜி. ராமநாதன்

வடிவேலும் மயிலும் துணை
வடிவேலும் மயிலும் துணை - சொல்
வளமார் செந்தமிழால் சந்ததமும் கந்தனைப் பாட
வடிவேலும் மயிலும் துணை

நடராஜன் அருள்பாலன் நான்மறை தொழும் சீலன்
நடராஜன் அருள்பாலன் நான்மறை தொழும் சீலன்
தடமேவும் பொழில் சூழும் தணிகைவாழும் பரமஞான குருபரன்
வடிவேலும் மயிலும் துணை

தமிழ்மாலை தனைச் சூடுவான்
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான்

தாபமிகு வெப்பு வானமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
தாபமிகு வெப்பு வானமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாவுன்
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாவுன்
தாளையளித்திட வேணுமெனத் துதிமாடனருணகிரி நாதனழைத்திட
தயவுடன் இசைந்து அருள்மழை பொழிந்து
முத்தைத்தரு பத்தித் திருநகையென
முதலடி உதைத்த தழைத்த கருணையை
நினைந்து நினைந்து கவிமலர் தொடுத்த

தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான்

சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே யசையக் குழையூசலாட
சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே யசையக் குழையூசலாட துவர்கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே
தலையலங்காரம் புறப்பட்டதே

Tuesday, June 30, 2009

பட்டணந்தான் போகலாமடி

எங்கள் வீட்டு மஹாலட்சுமி
சீர்காழி கோவிந்தராஜன், ஜமுனா ராணி

பட்டணந்தான் போகலாமடி பொம்பளே பணங்காசு தேடலாமடி - நல்ல
கட்டாணி முத்தே என் கண்ணாடி நீயும் வாடி பொண்டாட்டி தாயே

டவுனு பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே டவுனாகிப் போயிடுவீங்க - அந்த
டாம்பீகம் ஏழைக்குத் தாங்காது பயணம் வேண்டான்னா கேளு மாமா

கெட்டவுங்க பட்டணத்த ஒட்டிக்கோணும் என்பதால
கெட்டவுங்க பட்டணத்த ஒட்டிக்கோணும் என்பதால
பட்டிக்காட்ட விட்டுப்போட்டுப் பல பேரும் போவதால
கட்டிச் சோத்தக் கட்டிக் கொள்ளடி பொம்பளே
தட்டிச் சொன்னா கேக்க மாட்டேண்டி - நல்ல
கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே

வேலை ஏதுங்க கூலி ஏதுங்க வெக்கக்கேட்ட சொல்றேன் கேளுங்க - அங்கே
வேலை ஏதுங்க கூலி ஏதுங்க வெக்கக்கேட்ட சொல்றேன் கேளுங்க
காலேஜ் படிப்பு காப்பி ஆத்துதான் பிஏ படிப்பு பென்சு தொடைக்குதாம்
ஆளை ஏச்சு ஆளு பொழைக்குதாம் அஞ்சுக்கு ரெண்டு கஞ்சிக்கலையுதாம்
மேலே போறது நூத்துல ஒண்ணு மிச்சமுள்ளது லாற்றியடிக்குதாம்

ஒண்ணான சாமி எல்லாம் ஒண்ணுமே பண்ணாமே தவிக்கையிலே மாப்பிள்ளே
ஒண்ணான சாமி எல்லாம் ஒண்ணுமே பண்ணாமே தவிக்கையிலே
உன்னாலே என்னாகும் எண்ணமே போனா பின்னாலே கேடு மாமா

ராத்திரி பகலா ரிக்சா இழுப்பேன் நைஸா பேசி பைசா இழுப்பேன்
அம்மா ஒதுங்கு ஒதுங்கு
ராத்திரி பகலா ரிக்சா இழுப்பேன் நைஸா பேசி பைசா இழுப்பேன்
ட்ராமா சினிமா சர்க்கஸ் பார்ப்பேன் ராஜா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன்
வேத்துப் புடுங்கினா பீச்சுக்குப் போவேன் மீந்தப் பணத்திலே மீனு வாங்குவேன்
ஆத்தாடி உன் கையில குடுப்பேன் ஆக்கச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்

இதுக்கு மேல சொல்ல மாட்டேண்டி பொம்பள இந்த ஊரில் இருக்க மாட்டேண்டி - நான்
இப்போதே போவணும் உங்கொப்பாவைக் கேட்டு ஏதாச்சும் வாங்கி வாடி

பட்டணந்தான் போகலாமடி பொம்பளே பணங்காசு தேடலாமடி - அந்தக்
கட்டாணி முத்தே என் கண்ணாடி நீயும் வாடி பொண்டாட்டி தாயே
டவுனு பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே டவுனாகிப் போயிடுவீங்க - அந்த
டாம்பீகம் ஏழைக்குத் தாங்காது பயணம் வேண்டான்னா கேளு மாமா

மனுஷன மனுஷன் இழுக்கற வேலை வயிறு காஞ்சவன் செய்யற வேலை
மனுஷன மனுஷன் இழுக்கற வேலை வயிறு காஞ்சவன் செய்யுற வேலை
கழுத்துக்கு மீறி பணம் வந்த போது மனுஷன சும்மா இருக்க விடாது
என்னை மறந்து உன்னை மறந்து எல்லா வேலையும் செய்வே துணிஞ்சு
இரவு ராணிகள் வலையில விழுந்து ஏமாந்து போவே இன்னும் கேளு

போலீசு புலி புடிக்கும் மாமா புர்ராவ பேத்தெடுக்கும்
அங்கே போவாதே வீணாக சாவாதே மாமா பொஞ்சாதி பேச்சக் கேளு

நீ
ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியாக் கம்மனாட்டி - நீ
ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியாக் கம்மனாட்டி
ஊருவிட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமுன்னு
ஊருவிட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமுன்னு
உண்மையோட சொன்ன சொல்லு நன்மையாகத் தோணுது

பட்டணந்தான் போக மாட்டேண்டி உன்னையும் பயணமாகச் சொல்ல மாட்டேண்டி நல்ல
கட்டாணி முத்தே என் கண்ணத் தொறந்தவ நீ தான் பொண்டாட்டி தாயே

என்னைத் தனியா விட மாட்டேன்னு என் தலைமேல் அடிச்சு சத்யம் பண்ணு
எங்கப்பனான சத்தியம் சத்தியம் சத்தியம்

ஏரோட்டி பாத்தி புடிச்சு அதிலே நீர் பாய்ச்சு நெல்ல வெதெச்சு - நம்ம
ஊரோடு ஒண்ணாக உள்ளதக் கொண்டு நாம் உல்லாசமாக வாழ்வோம்
ஏரோட்டி பாத்தி புடிச்சு அதிலே நீர் பாய்ச்சு நெல்ல வெதெச்சு - நம்ம
ஊரோடு ஒண்ணாக உள்ளதக் கொண்டு நாம் உல்லாசமாக வாழ்வோம்

Saturday, June 27, 2009

இரவும் நிலவும் வளரட்டுமே

திரைப்படம்: கர்ணன்
பாடல் இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
தரவும் பெறவும் உதவட்டுமே நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே

மல்லிகைப் பஞ்சணை விரிக்கட்டுமே - அங்கு
மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே
இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே - நெஞ்சில்
இருக்கின்ற வரையில் எடுக்கட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே

ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே - அங்கு
அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
நாடகம் முழுவதும் நடக்கட்டுமே - அதில்
நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே

Popular Posts

Popular Posts

Popular Posts

Popular Posts