Friday, July 31, 2009

யாரை நம்பி நான் பொறந்தேன்

திரைப்படம்: எங்க ஊர் ராஜா
இயற்றியவர்: கவிஞர் கண்னதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே பெத்த புள்ளே சொந்தமில்ல

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனமே கல்லம்மா
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையைப் பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக நீ யார் நான் யார் போடா போ
ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
தேடி வரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடி வரும்

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

Follow me on Twitter

Thursday, July 30, 2009

இந்த மான் உன்தன் சொந்த மான்

திரைப்படம்: கரகாட்டக் காரன்
இயற்றியவர்: கங்கை அமரன்
இசை: இளையராஜா
பாடியோர்: இளையராஜா, சித்ரா

இந்த மான் உன்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
இந்த மான் உன்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே
இந்த மான் உன்தன் சொந்த மான் பக்கம்
வந்த மான்

வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே
நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
அன்னமே ஆ..ஆ..ஆ.
அன்னமே என்தன் சொர்ணமே உன்தன்
எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மதுக் கிண்ணமே அதில்
பொன்மணி வைரங்கள் மின்னுமே
எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே

இந்த மான் உன்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவனே என்னுயிரே

பொன்மணி மேகலை ஆடுதே
உன்விழி தான் இடம் தேடுதே
பெண் உடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே
எண்ணத்தான் ஆ.. ஆ..
எண்ணத்தான் உன்னை எண்ணித்தான்
உடன் மின்னத்தான் மேகலை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான் என்னை
சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
மோகந்தான் சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்

இந்த மான் உன்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
இந்த மான் என்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னவனே
Follow me on Twitter

Wednesday, July 29, 2009

காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே

நெஞ்சம் மறப்பதில்லை
கவிஞர் கண்ணதாசன்
எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
டி.எம் சௌந்தரராஜன்

காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
கள்ளழகர் கோயில் கொண்ட வீட்டுப் பொண்ணே
காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே

பாடுகிற பாட்டக் கொஞ்சம் கேளடி பொண்ணே
பாடுகிற பாட்டக் கொஞ்சம் கேளடி பொண்ணே
பக்குவமா பதிலே இங்கே கூறடி பொண்ணே பொண்ணே

காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே

மாடப்புறாப் போலே ஒரு கன்னி வந்தாளாம்
மாப்பிள்ளைய மனசுக்குள்ளே எண்ணி வந்தாளாம்
ஆடி மாச வெள்ளம் போலே ஆடி வந்தாளம் - வந்து
ஆசையெல்லாம் கண்ணுக்குள்ளே மூடி வச்சாளாம்

காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
கள்ளழகர் கோயில் கொண்ட வீட்டுப் பொண்ணே
காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே

எட்டாத தூரம் என்று ஏங்கி விட்டாளா?
ஏழையென்று வீட்டுக்குள்ளே தங்கி விட்டாளா?
தொட்டது போல் ராத்திரி வேளே கனவு கண்டாளா?
தூக்கத்திலே யாரிடமும் உளறி விட்டாளா?

ஏன் பாத்தோம் ஏன் நெனச்சோமுன்னு கவலைப் படுறாங்களா?
எப்போ பாப்போம் கப்புனு சேருவோமுன்னு நெனக்கிறீங்கிளா?
அப்போதைக்கப்போ ஆசையிலேயும் பாசத்திலேயும்
நேசத்திலேயும் விழுந்து துடிக்கிறாங்களா?

அம்மா மனசு சும்மா இருன்னு ஜமாஜமான்னு
கல்யாணம் நடக்கும்னு சொல்றியா?

கல்யாண மாப்பிள்ள பொண்ணு போகுது பாரு
காதல் தந்த கவலை எல்லாம் தீருது பாரு
பொ்ல்லாத மாமன் மனசு மாறுது பாரு
பூப்போல பெண்ணுக்கு வாழ்வு வருது பாரு

காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
கள்ளழகர் கோயில் கொண்ட வீட்டுப் பொண்ணே
காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே

Follow me on Twitter

Tuesday, July 28, 2009

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

அவள் ஒரு தொடர்கதை
கவிஞர் கண்ணதாசன்
எம்.எஸ். விஸ்வநாதன்
கே.ஜே. ஜேசுதாஸ்

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா? ஆ..
நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா? - இல்லை
என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?
தெய்வம் செய்த பாபம் இது போடி தங்கச்சீ
கொன்றால் பாபம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி

ஆதி வீடு அந்தம் காடு இதில்
நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

வெறும் கோவில் இதிலென்ன அபிஷேவம் உன்
மனமெங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி

கொண்டதென்ன கொடுப்பதென்ன - இதில்
தாயென்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதையென்ன?

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் - அது
தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி

உண்மை என்ன பொய்மை என்ன இதில்
தேனென்ன கடிக்கும் தேளென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

Follow me on Twitter

Monday, July 27, 2009

காணா இன்பம் கனிந்ததேனோ

படம்: சபாஷ் மீனா
இயற்றியவர்: கு.ம. பாலசுப்பிரமணியம்
இசை: டி.ஜி. லிங்கப்பா
பாடியவர்: மோதி, பி.சுசீலா

காணா இன்பம் கனிந்ததேனோ
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ
ஆஆஅ ஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ

வானம் சிந்தும் மாமழை எல்லாம்
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
வானம் சிந்தும் மாமழை எல்லாம்
வானோர் தூவும் தேன்மலரோ?
வானோர் தூவும் தேன்மலரோ?
மேகம் யாவும் பேரொலியோடு
ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
மேகம் யாவும் பேரொலியோடு
மேளம் போலே முழங்குவதாலே

காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ

கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
விண்ணில் வாண வேடிக்கையோ?
மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
மனதில் பொங்கும் ப்ரேமையினாலே

காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஆஆஆஆஆஆ
காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஆ..ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஅ, ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅஅ ஆஆஆஆஆஆஆஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ
Follow me on Twitter

Tuesday, July 21, 2009

அத்திக்காய் காய் காய்

பலே பாண்டியா
விஸ்வநாதன் ராமமூர்த்தி
கவிஞர் கண்ணதாசன்
டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், ஜமுனா ராணி
இயக்கியவர்: பி.ஆர். பந்துலு
ஆண்டு 1962

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ? என்னுயிரும் நீயல்லவோ?
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே..

ஓஓஓ..ஓஓஓ..
கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?

இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா..

ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா..

உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

ஆஹாஹா ஆஹா ஓஹோஹோ ஹோஹோ ம்ஹ்ம்ம் ம்ம்

Follow me on Twitter

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்

மலைக் கள்ளன்
டி.எம். சௌந்தரராஜன்

ஆ..ஆ...ஆ..ஆ..ஆ..
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - இன்னும்
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டிப்
பாமர மக்களை வலையினில் மாட்டி

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் - கல்வி
தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம் - கல்வி
தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கருத்தாகப் பல தொழில் பயிலுவோம்
கருத்தாகப் பல தொழில் பயிலுவோம் - ஊரில்
கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்
- ஊரில்
கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

ஆளுக்கொரு வீடு கட்டுவோம்
ஆளுக்கொரு வீடு கட்டுவோம் - அதில்
ஆன கலைகளை சீராகப் பயில்வோம் - அதில்
ஆன கலைகளை சீராகப் பயில்வோம்
கேளிக்கையாகவே நாளினைப் போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாகத் திரட்டுவோம்

இன்னும் எத்தனை காலந்தான் இன்னும்
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
இந்த நாட்டிலே இந்த நாட்டிலே இந்த நாட்டிலே


Follow me on Twitter

Monday, July 20, 2009

எங்களுக்கும் காலம் வரும்

படம்: பாசமலர்
இயக்கம்: ஏ. பீம்சிங்
பாடலாசிரியர்: க்விஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1961

தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனேனா
தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனேனா ஓ....ஓ..ஓ..ஓ..
தந்தான தானதந்தானே தானேதந்தானேனே தானே தானேதந்தானேனே தானே தானேதந்தானே தந்தா

எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனன்னா

தந்தத் தானே தந்தன்னா தந்தத் தானே தந்தன்னா ஆ..ஆ..ஆ..ஆ ஆ..ஆ..ஆ

வளரும் வளரும் என்றே காத்திருந்தோம்
மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம்
மலர் முடிந்து பிஞ்சு வரும் வளர்ந்தவுடன் காய் கிடைக்கும்
காய்களெல்லாம் கனிந்தவுடன் பழம் பறிப்போமே

எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

தந்தத் தானே தந்தன்னா தந்தத் தானே தந்தன்னா ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ

உழவும் தொழிலும் இங்கே நாம் படைத்தோம்
உறவும் சுவையும் என்றும் நாம் வளர்த்தோம்
பணம் படைத்த மனிதரைப் போல் பஞ்சு மெத்தை நாம் பெறுவோம்
மாடி மனை வீடு கட்டி வாழ்ந்திருப்போமே

எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை ஆ...ஆ..ஆ..ஆ..
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ..ஆ..ஆ..ஆ..
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ.ஆ.ஆ.அ
தோல்வியுமில்லை ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே


Follow me on Twitter

அத்திக்காய் காய் காய்

> பலே பாண்டியா
> விஸ்வநாதன் ராமமூர்த்தி
> கவிஞர் கண்ணதாசன்
> டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், ஜமுனா ராணி
> இயக்கியவர்: பி.ஆர். பந்துலு
> ஆண்டு 1962
>
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
> இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
> இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ? என்னுயிரும் நீயல்லவோ?
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே..
>
> ஓஓஓ..ஓஓஓ..
> கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
> அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
> கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
> அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
> மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?
> என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
> இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?
>
> இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
> நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
> இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
> நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
> உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?
> என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
>
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
> இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
>
> ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா..
>
> ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
> ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
> ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
> ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
> சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா
> என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
>
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
> இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
>
> ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா..
>
> உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
> வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
> உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
> வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
> கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே
> இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா
>
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
> இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
>
> ஆஹாஹா ஆஹா ஓஹோஹோ ஹோஹோ ம்ஹ்ம்ம் ம்ம்
>
Follow me on Twitter

Saturday, July 18, 2009

சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே

வீரபாண்டிய கட்டபொம்மன்
இயற்றியவர்: கு.மா. பாலசுப்பிரமணியம்
பாடியவ்ர்: எஸ். வரலக்ஷ்மி
இசை: ஜி. ராமநாதன்

சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
மங்காத பொன்னே
மங்காத பொன்னே உன் வாய் முத்தம் ஒன்றாலே
மாறத இன்பங்கள் சேர்ப்பாயடி

சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

வாடாத ரோஜா உன் மேனி
வாடாத ரோஜா உன் மேனி - துள்ளி
ஆடாதே வா சின்ன ராணி
பூவான பாதம் நோவாத போதும்
புண்ணாகி என் நெஞ்சம் வாடும்
பாராளும் மாமன்னர் மார் மீதிலே நீ
சீராட வாராய் செந்தேனே - இந்தப்
பாராளும் மாமன்னர் மார் மீதிலே நீ
சீராட வாராய் செந்தேனே

சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

செவ்வல்லிக் கை வண்ணம் காட்டி ஆ..ஆ..
செவ்வல்லிக் கை வண்ணம் காட்டி எங்கள்
சிந்தை எல்லாம் இன்பமூட்டி நீ
ஆடாதே கண்ணே யாரேனும் உன்னை
கண்டாலும் ஆகாது மானே
அன்பென்னும் ஆனந்தப் பூங்காவிலே நீ
பண் பாட வாராய் செந்தேனே

சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி


Follow me on Twitter

Thursday, July 16, 2009

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் எனும் எலும்போடு சதை
நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியில் வல்வினை சூழ்ந்ததா
இன்மையை நான் அறியாததா
இன்மையை நான் அறியாததா
சிறு தொன்மையில் உண்மையை உணர்ந்திட

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்
ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பல வினையா
கணம் கணம் தினம் என்னை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும்
துரத்துதே உன் அருள் அருள் அருள் என்று
அதை நின்று மனம் இங்கு பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால் தாங்குவாய் உன்
திருக்கரம் எனை அரவணைத்துனதருள் பெற

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் எனும் எலும்போடு சதை
நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே

Wednesday, July 15, 2009

பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு

கிழக்கு வாசல் 1990
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னு மணி சிரிச்சா வெள்ளி மணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்

பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு

காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
மஞ்சளோ தேகம் கொஞ்சவரும் மேகம்
அஞ்சுகம் தூங்க கொண்டு வரும் ராகம்
நிலவே வான் நிலவே நான் புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹோய்

பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னு மணி சிரிச்சா வெள்ளி மணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு

பூநாத்து மொகம் பாத்து வெண்ணிலா நாண
தாளாம தடம் பாத்து வந்த வழி போக
பூநாத்து மொகம் பாத்து வெண்ணிலா நாண
தாளாம தடம் பாத்து வந்த வழி போக
சித்திரத்துச் சோலே முத்து மணி மாலே
மொத்தத்தில தாரேன் துக்கமென்ன மானே
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
விண்ணுலே மீன் புடிச்சு சேல தெச்சுத் தாரேன்

பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னு மணி சிரிச்சா வெள்ளி மணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு


Saturday, July 11, 2009

பிறக்கும் போதும் அழுகின்றாய்

படம்: கவலை இல்லாத மனிதன்
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்

இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்
இயற்கை சிரிக்கும்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்

அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்
பெரும்பேரின்பம்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே

Thursday, July 9, 2009

வா கலாப மயிலே

படம்: காத்தவராயன்
நடிகர்கள்: சிவாஜி கணேசன், என்.எஸ். கிருஷ்ணன், சாவித்திரி, கண்ணாம்பா, ஈ.வி. சரோஜா
பாடலாசிரியர்: டி.என். ராமையாதாஸ்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
தயாரிப்பு: டி.ஆர். ராமண்ணா

வா கலாப மயிலே வா கலாப மயிலே ஓடி நீ
வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே

வந்தேன் கனியமுதம் தந்தேன் மகிழ்ந்திடவே வா
வந்தேன் கனியமுதம் தந்தேன் மகிழ்ந்திடவே
வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே

வாழ்நாளில் இனி நான்
வாழ்நாளில் இனி நான் வளம் பெறவே
வாழ்நாளில் இனி நான் வளம் பெறவே
வண்ணத் தமிழ்க் கலையே துள்ளித் துள்ளி விளையாட வா
வண்ணத் தமிழ்க் கலையே துள்ளித் துள்ளி விளையாட வா
நீ வா கண்ணே வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே

ஆலையின் கரும்பானேன் ஆழியின் துரும்பானேன்
ஆலையின் கரும்பானேன் ஆழியின் துரும்பானேன்
காலமெல்லாம் உன்தன் காதலில் மெலிந்தேனே
காலமெல்லாம் உன்தன் காதலில் மெலிந்தேன்
விண்ணோடு விளையாடும் வளர்மதியே
விண்ணோடு விளையாடும் வளர்மதியே என்தன்
கண்ணோடு கனிந்தாடும் கலை நிதியே
கண்ணோடு கனிந்தாடும் கலை நிதியே
எந்நாளும் மறவேனே எழில் ரதியே
எந்நாளும் மறவேனே எழில் ரதியே

மின்னலிடைக் கொடியே அன்னநடை அழகோடு வா
மின்னலிடைக் கொடியே அன்னநடை அழகோடு வா
வாராயோ என்னைப் பாரயோ கலி தீராயோ
கண்ணே வாராயோ என்தன்
ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா

மங்கையர் முகத்திலே கொஞ்சி விளையாடும்

படம்: கல்யாணப் பரிசு
ஜிக்கி குழுவினர்
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்

ம்ங்கையர் முகத்திலே கொஞ்சி விளையாடும்
மஞ்சள் நிற வளையல் இது வாழ்வு தரும் வளையல்
மங்கலப் பெண்குலம் பொட்டு வைத்தே மகிழும்
குங்கும நிறத்தோடு குலுங்கும் திரு வளையல்
வற்றாத மாநில வளந்தனை விளக்கிடும்
வற்றாத மாநில வளந்தனை விளக்கிடும்
மங்காத பச்சை நிறம் வழங்கும் எழில் வளையல் - தும்பை
மலர் போன்று இரு மனமும் மாசின்றி வாழ்கவென
வாயார வாழ்த்திடும் வெண்சங்கு வளையல்
வாயார வாழ்த்திடும் வெண்சங்கு வளையல்

அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
அக்கம் பக்கம் கலகலப்பு யாரைப் பார்த்தாலும் சுறுசுறுப்பு
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே

முத்துப் போலே பவழக் கொத்துப் போல இன்னும்
மூணு மாசம் போனா மகன் பொறப்பான்
முத்துப் போலே பவழக் கொத்துப் போல இன்னும்
மூணு மாசம் போனா மகன் பொறப்பான்
பட்டுப்போலத் தங்கத் தட்டுப் போலே கரும்புக்
கட்டுப் போலக் கிடந்து கண்னைப் பறிறப்பான்

அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே

ஒண்ணும் தெரியாத சின்னப் பிள்ளை போலே
ஒக்காந்திருக்காரு மாப்பிள்ளை அத்தான் ஆமா
ஒக்காந்திருக்காரு மாப்பிள்ளை அத்தான் - அவர்
கண்ணே முழிக்கிறாரு சும்மா கனைக்கிறாரு
என்னான்னு கேளுங்கடி சங்கதியத் தான் - அடி
என்னான்னு கேளுங்கடி சங்கதியத் தான் - அடி
எனக்குந்தெரியாது ஒனக்குந்தெரியாது
ஏதேதோ பேசுறாங்க ரெண்டு பேரும் - அதை
வெளக்க முடியாது வெவரம் புரியாது
வேணாண்டி நமக்கது ரொம்ப தூரம் - அடி
ஆமாண்டி நமக்கது ரொம்ப தூரம்

அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே

தாலாட்டுப் பாடி இவர் தாயாகி மகனுக்குப்
பாலூட்ட நெருங்குது நாளு
தாலாட்டுப் பாடி இவர் தாயாகி மகனுக்குப்
பாலூட்ட நெருங்குது நாளு - அவன்
காலாட்டிக் கையாட்டித் துள்ளுறதைப் பாத்துப்புட்டா
கீழே விட மாட்டாரு ஆளு - அவனைக்
கீழே விட மாட்டாரு ஆளு

அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
அக்கம் பக்கம் கலகலப்பு யாரைப் பார்த்தாலும் சுறுசுறுப்பு
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே

Tuesday, July 7, 2009

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு

உன்னால் முடியும் தம்பி
இயக்கியவர்: கே. பாலச்சந்தர்
நடிகர்கள்: ஜெமினி கணேசன், கமலஹாசன், சீதா, ஜனகராஜ், மீசை முருகேஷ், நாசர், வி.கே. ராமசாமி
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: முத்துலிங்கம் புலமைப்பித்தன்

தந்தன்னானா தந்தன்னானா தந்தன்னானா தானா
தந்தன்னானா தந்தன்னானா தந்தன்னானா தந்தன்னானா

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே
வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லே - சனம்
நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லே - இது
நாடா இல்லே வெறும் காடா? - இதெக்
கேக்க யாரும் இல்லே தோழா - இது
நாடா இல்லே வெறும் காடா? இதெக்
கேக்க யாரும் இல்லே தோழா

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது?
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ
வீடின்றி வாசலின்றித் தவிக்குது
எத்தனை காலம் இப்படிப் போகும்?
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்
என்றிங்கு வாழும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே

ஆத்துக்குப் பாதை இங்கு யாரு தந்தது?
தானாகப் பாதை கண்டு நடக்குது
காத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது?
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா?
கங்கையும் தெற்கே பாயாதா? காவிரியோடு சேராதா?
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா?

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே - இது
நாடா இல்லே வெறும் காடா? - இதெக்
கேக்க யாரும் இல்லே தோழா - இது
நாடா இல்லே வெறும் காடா? - இதெக்
கேக்க யாரும் இல்லே தோழா




==============================

Monday, July 6, 2009

மயக்கம் எனது தாயகம்

திரைப்படம்: குங்குமம்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்



Get this widget | Track details | eSnips Social DNA


மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம் (மயக்கம்)

பகலில் தோன்றும் நிலவு
கண் பார்வைக்கு மறைந்த அழகு
திரை மூடிய சிலை நான்
துன்பச் சிறையில் மலைந்த மலர் நான் (மயக்கம்)

நானே எனக்குப் பகையானேன் - என்
நாடகத்தில் தான் திரை ஆனேன்
தேனே உனக்குப் புரியாது
அந்த தெய்வம் வராமல் விளங்காது

விதியும் மதியும் வேறம்மா - அதன்
விளக்கம் நான் தான் பாரம்மா
மதியில் வந்தவள் நீயம்மா - என்
வழி மறைத்தாள் விதியம்மா (மயக்கம்)

ஆடி அடங்கும் வாழ்க்கையடா

திரைப்படம்: நீர்க்குமிழி

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா!
ஆறடி நிலமே சொந்தமடா!

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா - கண்
மூடினால் காலில்லாக் கட்டிலடா!

பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே வாழ்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்

சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்!

வகுப்பான் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை

Saturday, July 4, 2009

ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர். ஈஸ்வரி

இயற்றியவர்: மருதகாசி

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

திரைப்படம்: பாகப்பிரிவினை

மந்தரையின் போதனையால் மனம் மாறிக் கைகேயி
மஞ்சள் குங்குமம் இழந்தாள்
வஞ்சக சகுனியின் சேர்க்கையால் கௌரவர்கள்
பஞ்ச பாண்டவரைப் பகைத்து அழிந்தார்
சிந்தனையில் இதையெல்லாம்
சிறிதேனும் கொள்ளாமல் மனிதரெல்லாம்
மந்த மதியால் அறிவு மயங்கி
மனம் போனபடி நடக்கலாமோ?

ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே

உணர்வோடு ஒன்றியே உருவாகும் பாசமே
அணையாத தீபமாய் சுடரென்றும் வீசுமே
நெஞ்சில் உண்டான அன்பையே துண்டாடி வம்பையே
உறவாகத் தந்திடும் சிலர் சொல்லை நம்பியே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே

ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே

துணையின்றி வெண்புறா தனியாக வந்ததே
வனவேடன் வீசிய வலைதன்னில் வீழ்ந்ததே
இனம் யாவும் சேர்ந்து தான் அதை மீட்டுச் சென்றதே
கதையான போதிலும் கருத்துள்ள பாடமே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே

ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே

Thursday, July 2, 2009

வடிவேலும் மயிலும் துணை

திரைப்படம்: அம்பிகாபதி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இசை: ஜி. ராமநாதன்

வடிவேலும் மயிலும் துணை
வடிவேலும் மயிலும் துணை - சொல்
வளமார் செந்தமிழால் சந்ததமும் கந்தனைப் பாட
வடிவேலும் மயிலும் துணை

நடராஜன் அருள்பாலன் நான்மறை தொழும் சீலன்
நடராஜன் அருள்பாலன் நான்மறை தொழும் சீலன்
தடமேவும் பொழில் சூழும் தணிகைவாழும் பரமஞான குருபரன்
வடிவேலும் மயிலும் துணை

தமிழ்மாலை தனைச் சூடுவான்
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான்

தாபமிகு வெப்பு வானமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
தாபமிகு வெப்பு வானமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாவுன்
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாவுன்
தாளையளித்திட வேணுமெனத் துதிமாடனருணகிரி நாதனழைத்திட
தயவுடன் இசைந்து அருள்மழை பொழிந்து
முத்தைத்தரு பத்தித் திருநகையென
முதலடி உதைத்த தழைத்த கருணையை
நினைந்து நினைந்து கவிமலர் தொடுத்த

தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான்

சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே யசையக் குழையூசலாட
சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே யசையக் குழையூசலாட துவர்கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே
தலையலங்காரம் புறப்பட்டதே

Popular Posts

Popular Posts

Popular Posts

Popular Posts