Monday, July 20, 2009

அத்திக்காய் காய் காய்

> பலே பாண்டியா
> விஸ்வநாதன் ராமமூர்த்தி
> கவிஞர் கண்ணதாசன்
> டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், ஜமுனா ராணி
> இயக்கியவர்: பி.ஆர். பந்துலு
> ஆண்டு 1962
>
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
> இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
> இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ? என்னுயிரும் நீயல்லவோ?
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே..
>
> ஓஓஓ..ஓஓஓ..
> கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
> அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
> கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
> அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
> மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?
> என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
> இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?
>
> இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
> நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
> இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
> நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
> உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?
> என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
>
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
> இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
>
> ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா..
>
> ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
> ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
> ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
> ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
> சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா
> என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
>
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
> இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
>
> ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா..
>
> உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
> வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
> உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
> வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
> கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே
> இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா
>
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
> இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
>
> ஆஹாஹா ஆஹா ஓஹோஹோ ஹோஹோ ம்ஹ்ம்ம் ம்ம்
>
Follow me on Twitter

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Popular Posts

Popular Posts

Popular Posts

Popular Posts