Monday, July 20, 2009

எங்களுக்கும் காலம் வரும்

படம்: பாசமலர்
இயக்கம்: ஏ. பீம்சிங்
பாடலாசிரியர்: க்விஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1961

தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனேனா
தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனேனா ஓ....ஓ..ஓ..ஓ..
தந்தான தானதந்தானே தானேதந்தானேனே தானே தானேதந்தானேனே தானே தானேதந்தானே தந்தா

எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனன்னா

தந்தத் தானே தந்தன்னா தந்தத் தானே தந்தன்னா ஆ..ஆ..ஆ..ஆ ஆ..ஆ..ஆ

வளரும் வளரும் என்றே காத்திருந்தோம்
மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம்
மலர் முடிந்து பிஞ்சு வரும் வளர்ந்தவுடன் காய் கிடைக்கும்
காய்களெல்லாம் கனிந்தவுடன் பழம் பறிப்போமே

எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

தந்தத் தானே தந்தன்னா தந்தத் தானே தந்தன்னா ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ

உழவும் தொழிலும் இங்கே நாம் படைத்தோம்
உறவும் சுவையும் என்றும் நாம் வளர்த்தோம்
பணம் படைத்த மனிதரைப் போல் பஞ்சு மெத்தை நாம் பெறுவோம்
மாடி மனை வீடு கட்டி வாழ்ந்திருப்போமே

எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை ஆ...ஆ..ஆ..ஆ..
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ..ஆ..ஆ..ஆ..
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ.ஆ.ஆ.அ
தோல்வியுமில்லை ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே


Follow me on Twitter

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Popular Posts

Popular Posts

Popular Posts

Popular Posts