Friday, August 14, 2009

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் Tamil Song Lyric

படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர்: சங்கர் மஹாதேவன்
ஆண்டு 1999

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்?

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா?
காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா?
அன்பே என்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத் தானே ஒரு ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா?
காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா?
அன்பே என்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத் தானே ஒரு ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?

இதயமொரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி
இது தான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
க்ண்ணாடி பிம்பம் கண்ட கை ஒன்றுமில்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆனதடி நீ
ஒன்று சொல்லடி பெண்ணே இல்லை நின்று கொள்ளடி கண்ணே
என்தன் வாழ்க்கையே உந்தன் விழி விளிம்பில்
என்னைத் துரத்தாதே உயிர் கரையேறாதே

இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இனி இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா?
காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா?

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது?
பூவாசம் வீசும் உன்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்டபின்னும் இருளாத பாகம் எது
கதிர் வந்து காயும் உன்தன் கண்களடி பல
உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன
என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா?

என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?
நியாயமா நியாயமா?
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?
மௌனமா மௌனமா? என்ன சொல்லப் போகிறாய்?



No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Popular Posts

Popular Posts

Popular Posts

Popular Posts