Friday, March 31, 2017

யாரோ யாருக்குள் இங்கு யாரோ


படம்: சென்னை 600028
பாடல்: யாரோ யாருக்குள் இங்கு யாரோ!
இசை: யுவன்சங்கர் ராஜா
இயக்குநர்: வெங்கட் பிரபு

பல்லவி
======
ஆ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடையில்லா ஓர் கேள்வி
பெண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி (யாரோ யாருக்குள்)
ஆ: காதல் வரம் நான் வாங்க
கடைக்கண்கள் நீ வீச
கொக்கைப் போல நாள்தோறும்
ஒற்றைக்காலில் நின்றேன் கண்மணி
பெ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்குக் யார் தந்தாரோ
விடையில்லா ஒரு கேள்வி
ஆண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி

சரணம்-1



=======
பெ: ஊரை வெல்லும் தோகை நானே
உன்னால் இங்கு தோற்றுப் போனேன்
கண்ணால் யுத்தமே நீ செய்தாய் நித்தமே
ஆ: ஓஹோஹோ
நின்றாய் இங்கு மின்னல் கீற்றாய்
நித்தம் வாங்கும் மூச்சுக் காற்றாய்
உன்னை சூழ்கிறேன் நான் உன்னை சூழ்கிறேன்
பெ: காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது
ஆ: உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி
என்னால் வாழ ஆகாது அன்பே வா ஹே
ஆ: யாரோ
பெ: ஆஹா யாருக்குள் இங்கு யாரோ
ஆ: ம்ஹீம்.. யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
பெ: விடையில்லா ஒரு கேள்வி
ஆ: உயிர்க்காதல் ஒரு வேள்வி

சரணம்-2
=======

ஆ: உந்தன் ஆடை காயப்போடும்
உங்கள் வீட்டுக் கம்பிக்கொடியாய்
என்னை எண்ணினேன் நான் தவம் பண்ணினேன்
பெ: ஆஹாஹாஹா
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்டக் கிட்ட வந்தாய் துள்ளி
எட்டிப் போய்விடு இல்லை ஏதோ ஆகிடும்
ஆ: காதல் கொஞ்சம் பேசும்போது
சென்னைத் தமிழும் செந்தேன் தான்
பெ: ஆசை வெள்ளம் பாயும்போது
வங்கக்கடலும் வாய்க்கால் தான்
அன்பே வா ஹா..

ஆ: யாரோ
பெ: ம்ஹீம் ஹீம்
ஆ: யாருக்குள் இங்கு யாரோ
பெ: ஆஹா ஹா
ஆ: யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடையில்லா ஒரு கேள்வி
பெ: உயிர்க்காதல் ஒரு வேள்வி
ஆ: காதல் வரம் நான் வாங்க
கடைக்கண்கள் நீ வீச
கொக்கைப்போல நாள்தோறும்
ஒற்றைக்காலில் நின்றேன் கண்மணி
பெ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடையில்லா ஒரு கேள்வி
ஆண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி

Bookmark and Share

ஒளிமயமான எதிர்காலம்....Lyrics


திரைப்படம்பச்சை விளக்கு
பாடியவர்கள்டி.எம்சௌந்தர்ராஜன்பிசுசீலா
இசைஎம்.எஸ்விஸ்வநாதன்
வரிகள்கவிஞர் கண்ணதாசன்
SivajiGanesan 19620824.jpg

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது.

நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார்
அந்த நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார்
அந்த நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றால்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்
C. R. Vijayakumari.jpg
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது

குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும் மணம்பெறவே வருக

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது.



Bookmark and Share

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து.... Lyrics


சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து
சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே
கலந்திடக் கண்டேனே
மொட்டு விரித்த மலரினிலே
வண்டு மூழ்கிடக் கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து
மோதிடக் கண்டேனே

(சிட்டு)
Pudhiya Paravai Tamil Movie, Wiki, Story, Review, Release Date ...
பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே

(சிட்டு)
Puthiya Paravai Songs
ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா

(சிட்டு)
Puthiya Paravai (1964) - Viswanathan-Ramamoorthy - Listen to Puthiya ...


Chittuk kuruvi muththam koduthu 
Sernthidak kandene
Sevvaanam kadalinile kalanthidak kandene 
Mottu virintha malarinile vandu moozhgidak kandene
Moongilile kaattru vanthu modhidak kandene ho..
Chittukkuruvi muththam koduththu sernthidak kandene
Sevvaanam kadalinile kalanthidak kandene

Parandhu sella ninaiththu vitten enakkoru siragillaiye
Pazhaga vandhen thazhuva vandhen paravai thunaiyillaiye
Eduththu solla manamirunthum vaarththai varavillaiye
Ennennavo ninaivirunthum naanam vidavillaiye.. hoi...

Chittukkuruvi muththam koduththu sernthidak kandene
Sevvaanam kadalinile kalanthidak kandene

Oru pozudhu malaraaga kodiyil irundhenaa
Oru thadavai then koduththu madiyil vizhundhenaa
Iravinile nilavinile ennai marandhenaa
Ilamai tharum sugaththinile kannam sivandhenaa.. ho

Chittukkuruvi muththam koduththu sernthidak kandene
Sevvaanam kadalinile kalanthidak kandene
Mottu virintha malarinile vandu moozhgidak kandene
Moongilile kaatruu vanthu modhidak kandene..ho

Chittukkuruvi muththam koduththu sernthidak kandene
Sevvaanam kadalinile kalanthidak kandene
Bookmark and Share

உன் பேரே தெரியாது ...Lyrics


பாடல்: உன் பேரே தெரியாது
படம்: எங்கேயும் எப்போதும்
இசை: சத்யா
பாடியவர்: மதுஸ்ரீ
வரிகள்: நா. முத்துக்குமார்


உன் பேரே தெரியாது
உனைக் கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன்
உனக்கே தெரியாது
அந்தப் பேரை அறியாது
அட யாரும் இங்கேது
அதை ஒரு முறை சொன்னாலே
தூக்கம் வாராது

அட தினம் தோறும் அதைச் சொல்லி
உன்னைக் கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே
உன்னை மிஞ்சுவேன்

You never find a better time
Make a stand you ll be fine

ஹோ ..சூடான பேரும் அது தான்
சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும்
சூரியனாய் நீயும் நினைத்தால்
அது இல்லையே ..
ஹோ ..ஜில்லென்ற பேரும் அது தான்
கேட்டவுடன் நெஞ்சம் குளிரும்
நதி என்று நீயும் நினைத்தால்
அது இல்லையே...

சிலிர்க்க வைக்கும் தெய்வம் இல்லை
மிரள வைக்கும் மிருகம் இல்லை
ஒளி வட்டம் தெரிந்தாலும்
அது பட்டப் பெயர் இல்லை
என் பேரின் பின்னால் வரும் பேர்
நான் சொல்லவா ...?

You never find a better time
Make a stand you ll be fine.

பெரிதான பேரும் அது தான்
சொல்ல சொல்ல மூச்சே வாங்கும்
எத்தனை எழுத்துக்கள் என்றால்
விடை இல்லையே..
ஓ ..சிறிதான பேரும் அது தான்
சட்டென்று முடிந்தே போகும்
எப்படிச் சொல்வேன் நானும்
மொழி இல்லையே ...

சொல்லி விட்டால் உதடு ஒட்டும்
எழுதி விட்டால் தேனும் சொட்டும்
அது சுத்தத் தமிழ் பெயர் தான்
அயல் வார்த்தை அதில் இல்லை
என் பேரின் பின்னால் வரும் பேர்
நான் சொல்லவா ...?

உன் பேரே தெரியாது .......

Bookmark and Share

Tuesday, March 21, 2017

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே

வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே

தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
                                                                     (புல்லாங்குழல்)

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்

திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
                                                                    (புல்லாங்குழல்)

பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்

பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்

Bookmark and Share

Popular Posts

Popular Posts

Popular Posts

Popular Posts