Sunday, May 14, 2017

நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா


விஜய் ஆண்டனி நடித்து, இசையமைத்துள்ள “பிச்சைக்காரன்” 
Pichaikaran 3
விஜய் ஆண்டனி 2006’ம் வருடம் இயக்குனர் சசி அவர்களின் “டிஷ்யூம்” படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் 2012’ம் ஆண்டில் ஜீவா ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் “நான்” என்னும் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார். அதை தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களில் நடித்து மூன்று வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்துள்ளார்.
விஜய் ஆண்டனி ஜோடியாக சாண்டா டைடஸ் என்னும் புதுமுகம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தை “பூ” இயக்குனர் சசி இயக்கியுள்ளார். இப்படம் ஒரு பிச்சைக்காரனை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது என இயக்குனர் தான் பேசும்போது தெரிவித்தார். இந்த படம் காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு நல்ல படமாக இருக்கும் என பேசினார்.
இந்த படத்தில் ஆறு பாடல்கள் மற்றும் ஒரு தீம் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இசை வெளியீட்டுக்கு முன்பாக படத்தின் சில பாடல்காளை திரையில் ஒளிபரப்பினர். அதில் பத்திரிக்கையாளர் ஏக்நாத்ராஜ் எழுதி விஜய் ஆண்டனி பாடியுள்ள “நூறு சாமிகள்” என்று தொடங்கும் பாடல் ஒளிப்பரப்பப்பட்டது. அப்பாடலை செவியில் கேட்டு மகிழ்ந்த அனைவரும் கைத்தட்டி பாராட்டினர்.
Egnathraj
நூறு சாமிகள் இருந்தாலும்

அம்மா உன்னைப்போல் ஆகிடுமா

கோடி கோடியாய் கொடுத்தாலும்

நீ தந்த அன்பு கிடைத்திடுமா

ரத்தத்தை நான் தந்தாலுமே

உன் தியாகத்துக்கீடாகுமா

நான் பட்டக் கடன் தீர்ப்பேனென்றால்

ஓர் ஜென்மம் போதாதம்மா

நடமாடும் கோயில் நீதானே

நூறு சாமிகள் இருந்தாலும்

அம்மா உன்னைப்போல் ஆகிடுமா

கோடி கோடியாய் கொடுத்தாலும்

நீ தந்த அன்பு கிடைத்திடுமா

ஆராரோ…………. ஆராரிரோ………….

ஆராரோ…………. ஆராரிரோ………….

மழை வெயில் பார்க்காமல் பார்ப்பாள் வேலை

குழந்தைகள்தான் அவள் கழுத்துக்கு மாலை

மழை வெயில் பார்க்காமல் பார்ப்பாள் வேலை

குழந்தைகள்தான் அவள் கழுத்துக்கு மாலை

மெழுகாக உருகி தருவாளே ஒளியை

குழந்தைகள் சிரிப்பில் மறப்பாளே வலியை

நடமாடும் கோயில் நீதானே
நூறு சாமிகள் இருந்தாலும்

அம்மா உன்னைப்போல் ஆகிடுமா

கோடி கோடியாய் கொடுத்தாலும்

நீ தந்த அன்பு கிடைத்திடுமா

ரத்தத்தை நான் தந்தாலுமே

உன் தியாகத்துக்கீடாகுமா

நான் பட்டக் கடன் தீர்ப்பேனென்றால்

ஓர் ஜென்மம் போதாதம்மா

நடமாடும் கோயில் நீதானே

Bookmark and Share

Monday, May 8, 2017

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க

Movie nameஎங்க ஒரு ராஜா
Music: எம்.எஸ்.விஸ்வநாதன்
Singer(s)TM சௌந்தரராஜன்
Lyrics: கண்ணதாசன்


Image

கவியரசர் கண்ணதாசன் எங்க ஊர் ராஜா என்ற படத்துக்கு, ''யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க.'' என்று ஒரு பாடலில் எழுதியிருந்தார். "யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க"
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் யாரையுமே மரியாதைக் குறைவாய்ப் பேசி அறியாதவர். பாடல்களை கூட சற்று மரியாதைக் குறைவான வார்த்தைகள் வந்துவிட்டால் அதை மாற்ற வழி இருக்கிறதா என்று பார்ப்பார்.
மெல்லிசை மன்னர், '' என்ன கவிஞரே, இது மரியாதைக் குறைவாய் இருக்கிறதே, கொஞ்சம் மாற்றக் கூடாதா? யாரை நம்பி நான் பிறந்தேன், போங்கய்யா போங்க, என்று எழுதக் கூடாதா?'' என்று கேட்டார்.
அதற்கு கவிஞர் கிண்டலாக, ''டேய், நீ ரொம்ப அடக்கமானவன். இது எனக்கு மட்டுமல்ல. ஊருக்கே தெரியும். ' விஜயவாடா ' என்கிற ஊரைக் கூட'விஜயவாங்க' என்று சொல்கிற ஆள் நீ. பேசாம நான் சொல்கிற பல்லவியை அப்படியே போடு.'' என்றார்.


யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
குளத்தில தண்ணி இல்லே, கொக்குமில்ல மீனுமில்லே
குளத்தில தண்ணி இல்லே, கொக்குமில்ல மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே, பெத்த புள்ளே சொந்தமில்லே
பெட்டியிலே பணமில்லே, பெத்த புள்ளே சொந்தமில்லே

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
தென்னையப் பெத்தா எளநீரு, பிள்ளயப் பெத்தா கண்ணீரு
தென்னையப் பெத்தா எளநீரு, பிள்ளயப் பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனமே பித்தம்மா, பிள்ளை மனமோ கல்லம்மா
பானையிலே சோறிருந்தால் பூனைகளும் சொந்தமடா
சோதனையாய்ப் பங்கு வெச்சா, சொந்தமில்லே, பந்தமில்லே
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
நெஞ்சமிருக்கு துணிவாக, நேர்மையிருக்கு துணையாக
நெஞ்சமிருக்கு துணிவாக, நேர்மையிருக்கு துணையாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக, நான் யார்...நான் யார்... போடா போ
ஆடியில் காத்தடிச்சால், அ(ஐ)ப்பசியில் மழை வரும்
தேடிவரும் காலம் வந்தால், செல்வமெல்லாம் ஓடிவரும்...
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

Bookmark and Share

மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்

படம்: மனிதன் பாடியவர் : மலேஷியா வாசுதேவன்
இசை: சந்திர போஸ் 
 
 மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்?
வாழும் போது செத்து செத்துச்செத்து
பிழைப்பவன் மனிதனா?

வாழ்ந்த பின்னும் பேரை நாட்டி
நிலைப்பவன் மனிதனா?

பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக
செந்நீரும் சிந்தும் மனிதன் எவனோ
அவனே மனிதன் மனிதன் மனிதன்(2) 

அடுத்த வீட்டில் தீப்பிடிக்க
நினைப்பவன் மனிதனா
அந்த நேரம் ஓடிவந்து
அணைப்பவன் மனிதனா?

கொடுமை கண்டும் கண்ணை
மூடி கிடப்பவன் மனிதனா?
கோபம் கொண்டு நியாயம்
கேட்டு கொதிப்பவன் மனிதனா?
 

கெடுப்பவன் மனிதனா?
எடுப்பவன் மனிதனா
கொடுப்பவன் எவனடா
அவனே மனிதன் மனிதன் மனிதன் 
 

மனிதன் மனிதன்
எவன் தான் மனிதன் (2)
 ஏழைப்பெண்ணின் சேலை
தொட்டு இழுப்பவன் மனிதனா?
இரவில் மட்டும் தாலி கட்ட
நினைப்பவன் மனிதனா? (2) 
 

"காதல்" என்ற பேரைச்சொல்லி
நடிப்பவன் மனிதனா?
கற்பை மட்டும் கரன்சி நோட்டில்
கறப்பவன் மனிதனா? 
 

  தன்மானம் காக்கவும் பெண்மானம்
காக்கவும் துடிப்பவன் எவனடா
அவனே மனிதன்
மனிதன் மனிதன்
 

 மனிதன் மனிதன் எவன்

தான் மனிதன்? (2)

Bookmark and Share

ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிக்கிட்டேன்

ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிக்கிட்டேன் கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு கண்மணி என் கண்மணி (ஊரைத்)
பச்சைக் கொழந்தையின்னு பாலூத்தி வளத்தேன்
பாலைக் குடுச்சுப்புட்டு பாம்பாகக் கொத்துதடி (ஊரைத்)
ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம்
காசு பணம் வந்தா நேசம் சில மாசம்
சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண் தானோ
வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான் தானோ
என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி
என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி
தீப்பட்டக் காயத்துல தேள்வந்து கொட்டுதடி கண்மணி என் கண்மணி (ஊரைத்)
நேத்து இவன் ஏணி இன்று இவன் ஞானி
ஆளைக் கரை சேத்து ஆடும் இந்தத் தோணி
சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம்
பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம்
பணங்காசைக் கண்டுபுட்டா புலி கூட புல்லைத் தின்னும்
கலிகாலம் ஆச்சுதடி கண்மணி என் கண்மணி
அடங்காத காளை ஒன்னு அடிமாடாப் போனதடி கண்மணி என் கண்மணி (ஊரைத்)

Bookmark and Share

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்



Movie: Neengal Kettavai
Director: Balumahendra
Music: Illayaraja




கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று
கரையை தேடும் ஓடங்கள்
பிறக்கின்ற போதே....
பிறக்கின்ற போதே....இறக்கின்ற தேதி
இருக்கின்றதென்பது மெய் தானே
ஆசைகள் என்ன ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய் தானே
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானே
கனவு காணும் வாழ்க்கை யாவும்
காலங்கள் மாறும்...
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்
பேதை மனிதனே கடமைகள் இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்

Bookmark and Share

அச்சம் என்பது மடமையடா

படம் - மன்னாதி மன்னன் 
பாடல் - கண்ணதாசன்
இசை - விஸ்வநாதன் - ராம்முர்த்தி 
பாடியவர் டி..எம். செளந்தரராஜன்


அச்சம் என்பது மடமையடா 
அஞ்சாமை திராவிடர் உடைமையடா 
ஆறிலும் சாவு நூறிலும் சாவு 
தாயகம் காப்பது கடமையடா 
தாயகம் காப்பது கடமையடா

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா

கனக விசயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
கனக விசயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இடைபட வாழ்ந்தான் பாண்டியனே.

அச்சம் என்பது மடமையடா 
அஞ்சாமை திராவிடர் உரிமையடா 
ஆறிலும் சாவு நூறிலும் சாவு 
தாயகம் காப்பது கடமையடா 
தாயகம் காப்பது கடமையடா

கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை

அச்சம் என்பது மடமையடா 
அஞ்சாமை திராவிடர் உரிமையடா 
ஆறிலும் சாவு நூறிலும் சாவு 
தாயகம் காப்பது கடமையடா 
தாயகம் காப்பது கடமையடா

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்

அச்சம் என்பது மடமையடா 
அஞ்சாமை திராவிடர் உரிமையடா 
ஆறிலும் சாவு நூறிலும் சாவு 
தாயகம் காப்பது கடமையடா 
தாயகம் காப்பது கடமையடா

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா 

Bookmark and Share

தமிழா த‌மிழா நாளை ந‌ம் நாளே

தமிழா த‌மிழா நாளை ந‌ம் நாளே
த‌மிழா த‌மிழா நாடும் ந‌ம் நாடே

தமிழா த‌மிழா நாளை ந‌ம் நாளே
த‌மிழா த‌மிழா நாடும் ந‌ம் நாடே

என் வீடு தாய்த்த‌மிழ் நாடு என்றே சொல்ல‌டா
என் நாம‌ம் இந்திய‌ன் என்றே என்றும் நில்ல‌டா


தமிழா த‌மிழா நாளை ந‌ம் நாளே
த‌மிழா த‌மிழா நாடும் ந‌ம் நாடே

இன‌ம் மாற‌லாம் குண‌ம் ஒன்று தான்
இட‌ம் மாற‌லாம் நில‌ம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கழி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் இடம் ஒன்று தான்
இசை மாறலாம் ஒலி ஒன்று தான்
நம் இந்தியா அது ஒன்று தானே ... வா

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே
தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

நவபாரதம் பொதுவானது
இது வியர்வையால் உருவானது
பல தேகமோ எருவானது
அதனாலிது உருவானது
வலுவானது
அட வானிலா பிளவென்பது
இம்மண்ணிலா பிரிவென்பது இறைவா

Bookmark and Share

இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு

இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு..
திசைதொழும் துலுக்கர் என் தோழர்…
திசைதொழும் துலுக்கர் என் தோழர்
தேவன் இயேசுவும் என் கடவுள்
எல்லா மதமும் என் மதமே ..
எதுவும் எனக்கு சம்மதமே
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்
கங்கை பாயும் வங்கம் தென்னில் கதிர்கள் சாயும் தமிழகம்
தங்கம் விளையும் கன்னடம்
நல் தென்னை வளரும் கேரளம்
ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி
ராஜஸ்தான் பாஞ்சாலமும்
சேர்ந்து அமைந்த தேசம்
எங்கள் அன்னை பூமி பாரதம்
இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்
இதிகோ இதிகோ இக்கட பாருங்கோ
இதிகோ இதிகோ இக்கட பாருங்கோ
சுந்தர தெலுங்கினில் பாடுங்கோ
குச்சுப்பிடி நடனங்கள் ஆடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
ஷிரீசைலம் திருப்பதி கேந்திரம் உண்டு
தரிசனம் பண்ண வாருங்கோ
கப்பல் கட்டுற விசாகபட்டினம் கடற்கரை உண்டு பாருங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ…..
ஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு
காவிரி பிறந்த கன்னட நாட்டை யாவரும் போற்றி சொல்வாரு
ஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு
ப்ரிந்தாவனமும் சாமுண்டி கோவிலும் நோடு சுவாமி நீ நோடு..
நீ நோடு மைசூரு…
எல்லா மொழியும் எல்லா இனமும்
ஒண்ணு கலந்தது பெங்களூரு
ஏனு சுவாமி… ஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு
படைச்சோன் படைச்சோன் எங்களை படைச்சோன்
அல்லாஹ்..எங்கள் அல்லாஹ்…
ஞானும் இவளும் ஜனனம் எடுத்தது
கேரளம் திரிசூர் ஜில்லா
தேக்கு தென்னை பாக்கு மரங்கள்
இவிடே நோக்கணும் நீங்க..
தேயிலை மிளகு விளைவதை பார்த்து
வெள்ளையன் வந்தான் வாங்க..
படைச்சோன் படைச்சோன் எங்களை படைச்சோன்
அல்லாஹ்..எங்கள் அல்லாஹ்…
அல்லாஹ் ஒ.. அல்லாஹ்
அல்லாஹ் ஒ.. அல்லாஹ்
அல்லாஹ் ஒ.. அல்லாஹ்
சுனோ சுனோ பாய் சுனோ சுனோ மே
பஞ்சாப் வாலா கீத் சுனோ
பஞ்சாப் வாலா கீத் சுனோ
தங்க கலசம் பொற்கோவில்
எங்கள் ஊரில் தேக்கோ தேக்கோ
ஆஹா தேக்கோ தேக்கோ…
ம்ம்..ஆஹா தேக்கோ தேக்கோ…
ஜீலம் சட்லெஜ் நதிகள் பாயும்
கோலம் காண ஆவோ…ஆவோ..
ஆவோ ஆவோ…ம்..ஹா ஆவோ ஆவோ
ஆவோ..ம்ம்..ஹா…ஹா… ஆவோ…
ஆவோ ஆவோ…………….
பஞ்சாப் சிங்கம் லால லஜபதி
பகத்சிங் பிறந்த பொன்நாடு
பகத்சிங் பிறந்த பொன்நாடு
யாஹூ.. யாஹூ.. ம்ம்..ஆஹா யாஹூ யாஹூ…
யாஹூ.. யாஹோ…
எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும் எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்
(எல்லாம் ஒரு தாய் கிள்ளைகள்)
பாரத விலாசில் ஒன்றாய் வாழ்ந்து
பேசி பழகும் கிள்ளைகள்
(பேசி பழகும் கிள்ளைகள்)
சத்தியம் எங்கள் வேதம்
சமத்துவம் எங்கள் கீதம்
வருவதை பகிர்ந்து உண்போம்
வந்தே மாதரம் என்போம்…
வந்தே மாதரம்….வந்தே மாதரம்..
வந்தே மாதரம்….வந்தே மாதரம்..
வந்தே மாதரம்….வந்தே மாதரம்
வந்தே மாதரம்…………

Bookmark and Share

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா

வாயில் என்ன மந்திரமா
மனசு என்ன எந்திரமா
சாமியிடம் பேசுது புள்ளை
தாயழுகை கேட்கவுமில்லை
சாமியிடம் பேசுது புள்ளை
தாயழுகை கேட்கவுமில்லை

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா

அம்மா பசி என்றொரு கூக்குரல்
அதுதான் இனி தேசிய பாஷை
கட்சிக் கொடிகள் ஏறுது அங்கே
கஞ்சிப் பானை தெருவிலிங்கே
சுதந்திர நாடு சோத்துக்குக் கேடு
சொல்லாதே சாமி
நம்ம பூமியோ எப்போதும்
தர்மம் செஞ்ச பூமி ஹெ..
சுதந்திர நாடு சோத்துக்குக் கேடு
சொல்லாதே சாமி
நம்ம பூமியோ எப்போதும்
தர்மம் செஞ்ச பூமி

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா

தேசமிது செஞ்சது உனக்கு
ஏராளம் இங்கே உண்டு
நீ என்ன செஞ்ச அதுக்கு
ஒன்னக் கேட்டு நீ பதில் சொல்லு
நமக்கென்ன போடா போன்னு நழுவுறே
நேரம் பார்த்து
நாடு முழுதும் தீயாப் போனா
வீடு மட்டும் ஏது ஹாஹெஹ்ஹெ
நமக்கென்ன போடா போன்னு நழுவுற
நேரம் பார்த்து
நாடு முழுதும் தீயாப் போனா
வீடு மட்டும் ஏது

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
வாயில் என்ன மந்திரமா
மனசு என்ன எந்திரமா
சாமியிடம் பேசுது புள்ளை
தாயழுகை கேட்கவுமில்லை
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா


Bookmark and Share

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு
நீ கொண்டு வந்தது என்னடா, மீசை முறுக்கு
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு
உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு
இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து
அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

Bookmark and Share

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

படம் : ஆட்டோகிராப்
இசை : பரத்வாஜ்
பாடியவர்கள் : சித்ரா
பாடலாசிரியர்:  பா.விஜய்



ஆட்டோகிராஃப் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்சேரன் இதனை எழுதி, இயக்கி, தயாரித்ததுடன் நடிக்கவும் நடித்தார். இப்படம் வணிக நோக்கில் பெருவெற்றி பெற்றதுடன் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கான தேசிய விருது, சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றது.

நடிகர்கள்[தொகு]

  • சேரன் - செந்தில்குமார்
    • சிவப்பிரகாசம் - செந்தில்குமார், (சிறுவயது)
  • சினேகா - திவ்யா
  • கோபிகா - லத்திகா
  • மல்லிகா - கமலா
  • கனிகா - தேன்மொழி
  • இளவரசு - நாராயணன் (ஆசிரியர்)
    • கருப்பையா பாரதி - நாராயணன் ஆசிரியர் (வயதானவர்)
  • கிருஷ்ணா - கமலக்கண்ணன்
  • பெஞ்சமின் - ஊளமூக்கன் சுப்பிரமணி
    • பாண்டி - ஊளமூக்கன் சுப்பிரமணி (சிறுவயது)
  • ராஜேஷ் - செந்தில்குமாரின் அப்பா
  • விஜயா சிங் - செந்தில்குமாரின் அம்மா

வென்ற விருதுகள்[தொகு]

இத்திரைப்படம் வெளியான நாள்முதல் இப்படம் வென்ற விருதுகளை கீழே காணலாம்.

பாடல்கள்[தொகு]

ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களைக் கொண்ட இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் பரத்வாஜ் ஆவார்.
எண்பாடல்பாடியவர்(கள்)
1"ஞாபகம் வருதே"பரத்வாஜ்
2"கிழக்கே பார்த்தேன்"யுகேந்திரன்போனி
3"மனமே நலமா"பரத்வாஜ்
4"மனசுக்குள்ளே தாகம்"ஹரிஷ் ராகவேந்திராரேஷ்மி
5"மீசை வச்ச பேராண்டி"கோவை கமலாகார்த்திக்
6"நினைவுகள் நெஞ்சினில்"உன்னிமேனன்
7"ஒவ்வொரு பூக்களுமே"சித்ரா
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!
உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!
உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்!
கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்
!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!
மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா!
துக்கம் என்ன என் தோழா!
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!
மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ நீ மோதிவிடு!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ? நீ மோதிவிடு

Bookmark and Share

Popular Posts

Popular Posts

Popular Posts

Popular Posts